ஆப்நகரம்

'அங்காடித் தெரு' படத்தின் கனவு மெல்ல மெல்ல நிறைவேறுகிறது: வசந்தபாலன் நெகிழ்ச்சி!

தொழிலாளர்கள் உட்கார்ந்து கொண்டே பணியாற்றுவதற்கு தமிழக அரசு தாக்கல் செய்துள்ள சட்டத் திருத்தத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.

Samayam Tamil 7 Sep 2021, 9:48 am
தமிழக முதலமைச்சராக கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். அதன்பின்னர் பெண்களுக்கு இலவச பஸ் பயணம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம், கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி, வீடு தேடி வந்து மருத்துவம் பார்க்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
Samayam Tamil Vasanthabalan
Vasanthabalan


இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள துணிக்கடைகள், நகைக் கடைகள், வணிக நிறுவனங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் இருக்கைகளில் அமர்ந்து பணியாற்ற இன்று சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1947ஆம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தச்சட்ட திருத்தம் அணைத்து தரப்பினரிடமும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் வசந்தபாலன் இந்த சட்ட திருத்தத்திற்கு வரவேற்பு தெரிவித்து தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

'திருச்சிற்றம்பலம்’ படக்குழுவினருக்கு நேர்ந்த கொடுமை: அதிர்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்!
அதில், "தமிழக அரசுக்கு நன்றி. என் 'அங்காடித் தெரு' திரைப்படத்தின் கனவு மெல்ல மெல்ல நிறைவேறுகிறது. 'அங்காடித் தெரு' திரைப்படத்தில் தொடர்ந்து நின்றுகொண்டே வேலை செய்வதால் கால்களில் ஏற்படக்கூடிய வெரிக்கோஸ் நோய் பற்றிக் கூறியிருப்பேன். உங்களுக்கு நினைவிருக்கலாம்" என பதிவிட்டுள்ளார்..

ஜிவி பிரகாஷ் இயக்கத்தில் வசந்தபாலன் இயக்கியுள்ள 'ஜெயில்' படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. தற்போது அர்ஜுன் தாஸ் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் வசந்தபாலன். கொரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்