ஆப்நகரம்

உறுதியானதா மங்காத்தா 2? புதிய புகைப்படத்தை வெளியிட்ட வெங்கட் பிரபு

மங்காத்தா திரைப்படத்தின் அடுத்த பாகம் தயாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது நடிகா் அஜீத் குமாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இயக்குநா் வெங்கட் பிரபு தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.

Samayam Tamil 1 Mar 2019, 11:42 am
மங்காத்தா திரைப்படத்தின் அடுத்த பாகம் தயாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது நடிகா் அஜீத் குமாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இயக்குநா் வெங்கட் பிரபு தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.
Samayam Tamil Mankatha Ajith


கடந்த 2011ம் ஆண்டு அஜித்தை வைத்து மங்காத்தா எனும் வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் வெங்கட் பிரபு. ரிலீசாகி பல ஆண்டுகள் ஆனபோதும் இன்னமும் ரசிகா்களிடையே பேசும் படமாக உள்ள இப்படத்தின் இரண்டாம் பாகத்தை, அஜித் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இயக்குநா் வெங்கட் பிரபுவை ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் அஜீத்தின் ரசிகா்கள் மங்காத்தா 2 குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனா். கடந்த சில தினங்களுக்கு முன்னா் மீண்டும் அவரிடம் இந்த கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது வெங்கட் பிரபு கூறுகையில், அஜீத்துடன் விரைவில் ஒரு படம் உருவாக்குவேன். அது மங்காத்தா 2வா என்று உறுதியாக கூற முடியாது. ஆனால், அஜீத்துடன் அடுத்தப்படம் உறுதி என்று தொிவித்திருந்தாா்.


வெங்கட் பிரபுவின் பதிலால் ரசிகா்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருந்தனா். இந்நிலையில் வெங்கட் பிரபு அண்மையில் நடிகா் அஜீத்தை சந்தித்து பேசியுள்ளாா். இந்த சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெங்கட் பிரபு தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ளாா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்