சிம்பு ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பில் இருக்கும் 'மாநாடு' படம் நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்களில் வெளியாக உள்ளது. இந்தப்படத்தில் கல்யாணி, எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா மற்றும் கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர்.
சிம்பு என்றால் படப்பிடிப்பு தளத்திற்கு ஒழுங்காக வர மாட்டார். தயாரிப்பாளர்களுக்கு அவரால் கஷ்டம் என்பதை போன்ற குற்றச்சாட்டுகளை சமீபகாலமாக உடைந்தெறிந்து வருகிறார் சிம்பு. அந்த வகையில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் உடல் எடைக்காக அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட சிம்பு, கடந்த பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் படத்தின் மூலம் உடல் எடையை முழுவதுமாக குறைத்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார்.
'ஈஸ்வரன்' படத்தை தொடர்ந்து ‘மாநாடு’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் சிம்பு தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக நம்ப முடியாத அளவிற்கு உடல் எடையை குறைத்து அடையாளமே தெரியாத தோற்றத்தில் உள்ளார் சிம்பு. இந்நிலையில் 'மாநாடு' படம் குறித்தும் சிம்புவுடன் பணியாற்றியது குறித்தும் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார் வெங்கட் பிரபு.
அதில், எனக்கு சிம்புவுடன் மிகப்பெரிய பிணைப்பு இருக்கிறது. சிலர் சொல்வது போல அவர் மோசமானவர் அல்ல. ஒரு திறமையான நடிகர். படப்பிடிப்பு தொடங்கியதும் அவர் எனக்கு அனைத்து விஷயங்களையும் எளிமையாக்கி விடுவார். அவருடைய உடல் மாற்றத்தைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். எடையைக் குறைக்க வெறும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டார்.
ஒரு நண்பராக எனக்குஅவரைப்பற்றி சில ரகசியங்கள் தெரியும். ஆனால், அவை செய்திகளில் வெளியாகும் வரைதான் ரகசியங்களாக இருக்கும். எனவே என்னால் இதற்கு மேல் எதையும் சொல்ல முடியாது. படம் தாமதமாகுவதால் வெற்றிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு வித்தியாசமான படமாக ‘மாநாடு’ எப்போதும் இருக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.
சிம்பு என்றால் படப்பிடிப்பு தளத்திற்கு ஒழுங்காக வர மாட்டார். தயாரிப்பாளர்களுக்கு அவரால் கஷ்டம் என்பதை போன்ற குற்றச்சாட்டுகளை சமீபகாலமாக உடைந்தெறிந்து வருகிறார் சிம்பு. அந்த வகையில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் உடல் எடைக்காக அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட சிம்பு, கடந்த பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் படத்தின் மூலம் உடல் எடையை முழுவதுமாக குறைத்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார்.
'ஈஸ்வரன்' படத்தை தொடர்ந்து ‘மாநாடு’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் சிம்பு தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக நம்ப முடியாத அளவிற்கு உடல் எடையை குறைத்து அடையாளமே தெரியாத தோற்றத்தில் உள்ளார் சிம்பு. இந்நிலையில் 'மாநாடு' படம் குறித்தும் சிம்புவுடன் பணியாற்றியது குறித்தும் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார் வெங்கட் பிரபு.
அதில், எனக்கு சிம்புவுடன் மிகப்பெரிய பிணைப்பு இருக்கிறது. சிலர் சொல்வது போல அவர் மோசமானவர் அல்ல. ஒரு திறமையான நடிகர். படப்பிடிப்பு தொடங்கியதும் அவர் எனக்கு அனைத்து விஷயங்களையும் எளிமையாக்கி விடுவார். அவருடைய உடல் மாற்றத்தைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். எடையைக் குறைக்க வெறும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டார்.
ஒரு நண்பராக எனக்குஅவரைப்பற்றி சில ரகசியங்கள் தெரியும். ஆனால், அவை செய்திகளில் வெளியாகும் வரைதான் ரகசியங்களாக இருக்கும். எனவே என்னால் இதற்கு மேல் எதையும் சொல்ல முடியாது. படம் தாமதமாகுவதால் வெற்றிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு வித்தியாசமான படமாக ‘மாநாடு’ எப்போதும் இருக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.