ஆப்நகரம்

'ஜெய் பீம்' மாதிரியான படங்கள் இவர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தும்: வெற்றிமாறன் அதிரடி!

'ஜெய் பீம்' மாதிரியான படங்கள் சமூக நீதி ஏற்படக்கூடாது என நினைப்பவர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

Samayam Tamil 17 Nov 2021, 10:42 am
அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்தை சுற்றி நடக்கும் சர்ச்சைகள் இன்னமும் ஓய்ந்தபாடாக இல்லை. தமிழ் சினிமாவில் பெரும் புகைச்சலை கிளப்பியுள்ள இந்த விவகாரத்தில் திரையுலக பிரபலங்கள் ஒவ்வொருவராக சூர்யாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் சூர்யாவிற்கு ஆதரவாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
Samayam Tamil Suriya - Vetrimaaran
Suriya - Vetrimaaran


உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள 'ஜெய் பீம்' படத்தில் இருளர், பழங்குடியினருக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்தப்படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளார். தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்தப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

'ஜெய் பீம்' படம் தொடர்பாக பாமக கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் 9 கேள்விகள் எழுப்பி கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த கேள்விகளுக்கு பதிலளித்த சூர்யா, படத்தில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்கிற வாசகத்தை படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்துள்ளோம். சிறந்த படைப்பை பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.
பிரபல நடிகர், எழுத்தாளர் பாரதி மணி மறைவு: திரையுலகினர் இரங்கல்!
இந்நிலையில் நடிகர் சூர்யாவை தாக்கினாலோ, எட்டி உதைத்தாலோ அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி நேற்றைய தினம் பேட்டியளித்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. இதனை தொடர்ந்து சூர்யாவிற்கு ஆதரவாக பலரும் குரல் கொடுக்க துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வெற்றிமாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தப் படத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் அவல நிலையை உலகறியச் செய்ய வேண்டும் என்ற இயக்குநர் த.செ.ஞானவேலின் பொறுப்புணர்வும், சமூக நீதியை நிலைநிறுத்துவதில் திரையிலும், நிஜத்திலும் நடிகர் சூர்யா மேற்கொள்ளும் தொடர் முயற்சிகளும் உண்மையிலேயே ஊக்கமளிக்கின்றன.

#JaiBheem இத்தகைய படங்கள் சமூக நீதி ஏற்படக் கூடாது என விரும்புவோருக்கு பதற்றத்தை ஏற்படுத்துவது இயல்பே. #WeStandWithSuriya சமூகத்தில் நிலவும் பேதங்களையும், அநீதிகளையும் கேள்வி கேட்கும் திரைப்படங்களும் கூட சமூக நீதி ஆயுதங்களே. ஆகையால் நாங்கள் 'ஜெய் பீம்' படக்குழுவுடன் எப்போதும் நிற்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்