ஆப்நகரம்

இயக்குனர் விக்னேஷ்சிவன் வேண்டுகோள்..!

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் பெப்சி தொழிலாளார்களுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

TNN 4 Sep 2017, 7:27 pm
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் பெப்சி தொழிலாளார்களுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் வேண்டுகோள் வைத்துள்ளார்.
Samayam Tamil director vigneshsivan request to the fepsi workers
இயக்குனர் விக்னேஷ்சிவன் வேண்டுகோள்..!


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், சம்பள உயர்வு வேண்டியும் பெப்சி திரைப்படத் தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் வேலை நிறுத்தத்தால் ஏராளமான படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் ரஜினி நடித்து வரும் காலா, விஜய் நடிக்கும் மெர்சல், உட்பட பல பெரிய பட்ஜெட் படங்களின் படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழ் திரையுலகமே ஸ்தம்பித்து உள்ளது.

இதுகுறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியதாவது,
’ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து, ஒருவரை பற்றி ஒருவர் புகார் செய்வதை விட, ஒரு அறையில் உட்கார்ந்து, என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி முடிவெடுங்கள் என்றும் . தயவு செய்து இந்த வேலை நிறுத்தத்தை தவிர்க்கப் பாருங்கள்’ என்றும் தனது டுவீட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பெப்சி தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக, நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Director vigneshsivan request to the fepsi workers

அடுத்த செய்தி

டிரெண்டிங்