ஆப்நகரம்

'பில்லா 2' படத்திற்காக நான் எழுதிய கதையே வேற!!: மனம் திறந்த இயக்குனர் விஷ்ணு வர்தன்...

'பில்லா 2' படத்துக்காக நான் யோசித்து வைத்திருந்த கதை வெளியான 'பில்லா 2' பட கதையை விட சற்று வித்தியாசமானது என தெரிவித்துள்ளார் இயக்குனர் விஷ்ணு வர்தன்.

Samayam Tamil 12 Aug 2021, 10:03 am
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இயக்குனர் அவதாரம் எடுத்தவர் விஷ்ணுவர்தன். அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இவர், முதன்முதலாக இந்தியில் சேர்ஷா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் பில்லா 2 படத்திற்காக தான் எழுதிய கதை குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார் இயக்குனர் விஷ்ணு வர்தன்.
Samayam Tamil Ajith Kumar_Vishnuvardhan
Ajith Kumar_Vishnuvardhan


1980ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பில்லா' படத்தின் ரீமேக்காக அஜித்குமார் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளியான படம் பில்லா. நயன்தாரா, நமீதா, பிரபு, ரகுமான் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த படம் வசூல் ரீதியாகயும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது.

அதனை தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு பில்லா 2 படம் வெளியானது. அந்த சமயத்தில் விஷ்ணு வர்தன் பிசியாக இருந்ததால் சக்ரி டோலட்டி இந்தப்படத்தை இய்கியிருந்தார். இவர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'உன்னைப் போல் ஒருவன்' படத்தை இயக்கி இருந்தவர். பில்லாவின் முன் கதையை சொல்வதை போல் இந்தப்படம் அமைந்திருந்தது. இந்நிலையில் பில்லா 2 படத்திற்காக தான் எழுதிய கதை குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் விஷ்ணு வர்தன்.

ஜிவி பிரகாஷ் - சீனுராமசாமி இணையும் 'இடிமுழக்கம்': இணையத்தில் வைரலாகும் டைட்டில் லுக்!
அதில், "ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஏற்கெனவே வெளியான 'பில்லா 2'வைப் போலத்தான் நானும் 'பில்லா 2' படத்துக்காக அந்தக் கதாபாத்திரத்தின் முன்கதையை யோசித்து வைத்திருந்தேன். ஆனால், நான் வேறொரு வித்தியாசமான கோணத்தில் கதையை யோசித்து வைத்திருந்தேன். நான் அதை அணுகியதும் அப்படித்தான். அப்போது நான் அதை அறிவித்தபோது பாலிவுட்டில் 'டான் 2' அறிவிக்கப்பட்டதே அதைப் போலத்தான் இருக்கும் என்று நினைத்தார்கள். அந்த நேரத்தில் 'டான் 2' இயக்குநர் ஃபர்ஹானுடன் நான் தொலைபேசியில் பேசினேன்.

ஜகதீஷ் கதாபாத்திரம் யார், பிரபு கதாபாத்திரத்துக்கும் பில்லா கதாபாத்திரத்துக்கும் ஏற்கெனவே இருந்த பரிச்சயம் என்ன, பிரபு எப்படி இவரைத் துரத்த ஆரம்பித்தார், இருவருக்குமான உறவு என்ன, பில்லா என்கிற அந்தச் சின்னம் எப்படி வடிவம் பெற்றது, பில்லாவுக்கு ஏன் பெண்கள் மீது நம்பிக்கை கிடையாது, இப்படிப் பல கேள்விகளை வைத்துதான் பில்லா 2 கதையை எழுத ஆரம்பித்தேன். ஆனால் அப்போது நான் திரைக்கதையை முழுமையாக முடிக்கவில்லை. அதனால் தான் என் கதையை அவர்களுக்கு தர இயலவில்லை என தெரிவித்துள்ளார் விஷ்ணு வர்தன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்