ஆப்நகரம்

#MeToo: மீ டூ இயக்கத்தை தவறாக பயன்படுத்தும் சஞ்சனா கல்ராணி; இயக்குநர்கள் சங்கம் குற்றச்சாட்டு!

பெங்களூரு: சஞ்சனா கல்ராணி இயக்குநர் ரவி ஸ்ரீவட்சா மீது பாலியல் புகார் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Indiatimes 25 Oct 2018, 12:55 pm
பாலிவுட்டில் வெளியான ’மர்டர்’ படத்தை, கன்னடத்தில் ‘கண்டா ஹெண்டாதி’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு 12 ஆண்டுகளுக்கு முன் வெளியானது. இப்படத்தை ரவி ஸ்ரீவட்சா இயக்கினார். அதில் சஞ்சனா கல்ராணி நாயகியாக நடித்திருந்தார்.
Samayam Tamil Sanjjana


சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் #MeToo என்ற பெயரில் பாலியல் சீண்டல்கள் குறித்த குற்றச்சாட்டுகளை பல்வேறு தரப்பினரும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ’கண்டா ஹெண்டாதி’ படப்பிடிப்பின் போது, இயக்குநர் ரவி ஸ்ரீவட்சா தன்னை கட்டாயப்படுத்தி ஆபாச காட்சியில் நடிக்க வைத்ததாக நடிகை சஞ்சனா குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் தான் தற்கொலை செய்வதற்கு கூட முயன்றதாக கூறியுள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இயக்குநர் ஸ்ரீவட்சா, தான் எந்தவொரு விஷயத்தையும் நிர்பந்திக்கவில்லை. தனது புகழுக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் சஞ்சனா செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

சமீபத்தில் கவர்ச்சியான காட்சிகளில் நடிக்கவும், அந்த வீடியோவை வெளியிடவும் சஞ்சனா மகிழ்ச்சியுடன் முன்வந்ததை சுட்டிக் காட்டினார். இந்நிலையில் கன்னட இயக்குநர்கள் சங்கம் மீ டூ இயக்கத்திற்கு தனது ஆதரவை அளித்துள்ளதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

அதேசமயம் சஞ்சனாவின் குற்றச்சாட்டு தவறானது. மீ டூ இயக்கத்தை தவறாகப் பயன்படுத்துகிறார் என்று இயக்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் வெள்ளிக் கிழமைக்குள் இயக்குநரிடம் சஞ்சனா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

Directors’ Association says Sanjjanaa Galrani is misusing movement.

அடுத்த செய்தி

டிரெண்டிங்