ஆப்நகரம்

நாயகிகளுக்கு ‘அருவி’ மாதிரி அழுத்தமான கேரக்டர்களை இயக்குனர்கள் உருவாக்க வேண்டும்: ஐஸ்வர்யா ராஜேஷ்!

‘அருவி’ படம் மாதிரி அழுத்தமான கேரக்டர்களை நாயகிகளுக்கு படங்களில் உருவாக்க வேண்டும் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்குனர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Samayam Tamil 20 Mar 2018, 4:38 pm
‘அருவி’ படம் மாதிரி அழுத்தமான கேரக்டர்களை நாயகிகளுக்கு படங்களில் உருவாக்க வேண்டும் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்குனர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
Samayam Tamil ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்


2011ல் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி படிப்படியாக முன்னேறியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழில் 12க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் படங்களில் நாயகிகளின் கேரக்டருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்..

ஹாலிவுட் படத்தில் 40 வயதில் கூட நடிகைகள் அழுத்தமான கேரக்டர்களில் நடிக்கின்றனர். தமிழ் சினிமாவிலும் குஷ்பு, ரேவதி, ரோஜா போன்ற் நடிகைகள் நாயகிகளாக இருந்தபோது அவர்களது கேரக்டர்கள் வலுவாக இருந்தது. ஆனால் இன்றைய திரைப்படங்களில் நாயகிகள் பெரும்பாலும் நடனத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள். சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால் போன்ற நடிகைகள் கமர்ஷியல் படங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். நடிகைகளுக்கும் அழுத்தமான கதாபாத்திரங்களை இயக்குனர்கள் உருவாக்க வேண்டும். அருவி’ மாதிரி நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்கள் அதிகம் உருவாக்கப்படவேண்டும் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்