ஆப்நகரம்

வலிமை திரைப்படம் அப்டேட்: அஜித் சொன்ன முக்கிய தகவல்!

கொரோனா நிலைமை சரியாகும் வரை படத்தை வெளியிட வேண்டாம் என்று நடிகர் அஜித் தெரிவிதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Samayam Tamil 7 Jan 2021, 6:44 pm
கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர் முடிவுக்கு வரும் வரை ’வலிமை’ படத்தை வெளியிட வேண்டாம் என்று தயாரிப்பாளரிடம் அஜித் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Samayam Tamil அஜித்
அஜித்


மார்ச் 22ஆம் தேதிமுதல் கொரோனா தொற்றால் ஊரடங்கு போடப்பட்டதால், தியேட்டர்கள் மூடப்பட்டன. இந்நிலையில், நவம்பர் 10 ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

‘மாஸ்டர்’, ‘ஈஸ்வரன்’ படங்கள் பொங்கலுக்கு வெளியாவதால் விஜய், சிம்பு உள்ளிட்டோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இதுதொடர்பாக கோரிக்கை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சில தினங்களுக்கு முன்பு 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அனுமதியை சமூக ஆர்வலர்களும் மத்திய அரசும் பொது மக்களும் எதிர்த்து வருகிறார்கள். ஏசி தியேட்டரில் காற்றோட்டமில்லாமல் மூன்று மணி நேரம் தொடர்ந்து படம் பார்க்கும்போது கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்பதால் ’மக்கள் மீது அக்கறை இல்லை’ என்று இன்னும் பலர் விஜய்யையும் சிம்புவையும் விமர்சித்து வருகிறார்கள்.

Ajith எதிர்பார்த்த மாதிரியே ட்வீட்டிய போனி கபூர்: அஜித் ரசிகர்கள் செம...

திரைத்துறையிலிருந்தே 100 சதவீத பார்வையாளர்களுக்கு பதில் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று அரவிந்த் சாமி, குஷ்பு உள்ளிடோர் கருத்து தெரிவித்திருந்தனர். இதுபோன்ற காரணங்களால் கொரோனா தொற்று பரவல் சரியாகும் வரை தனது ’வலிமை’ படத்தை வெளியிட வேண்டாம் என்று தயாரிப்பாளர் போனி கபூரிடம் அஜித் உறுதியாக கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முன்னதாகவே அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள். இதனால், இம்மாத இறுதிக்குள் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு அஜித்தின் 50வது பிறந்தநாளான வரும் மே 1ஆம் தேதி ’வலிமை’ படத்தினை வெளியிடுவதாக திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் அஜித், தியேட்டருக்கு ரசிகர்கள் வந்தால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதற்கு நாமே காரணமாக அமைந்துவிடக்கூடாது. அதனால், நிலைமை சரியாகும்வரை படத்தை வெளியிட வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்