ஆப்நகரம்

மகளிர் மட்டும் படத்தில் 3 பெண்களின் அதிரடி ஆட்டம்!!

தனித்தனி மூன்று பெண்களின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களைப் பற்றிய கதைதான் ‘மகளிர் மட்டும்’ என்கிறார் இயக்குனர் பிரம்மா.

TOI Contributor 14 Mar 2017, 4:38 pm
தனித்தனி மூன்று பெண்களின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களைப் பற்றிய கதைதான் ‘மகளிர் மட்டும்’ என்கிறார் இயக்குனர் பிரம்மா.
Samayam Tamil do you know the story of magalir mattum
மகளிர் மட்டும் படத்தில் 3 பெண்களின் அதிரடி ஆட்டம்!!


இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவாகும் படம்தான் ‘மகளிர் மட்டும்’. இந்தப் படத்தில் ஜோதிகாவுடன் நடிகைகள் சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா ஆகிய மூவரும் நடிக்கின்றனர். படத்தில் நடிகை ஜோதிகா ஆவண படம் எடுக்கும் டைரக்டராக நடிக்கிறார். சமுதாயத்தில் மூன்று விதமான பெண்களை சந்தித்து அவர்கள் வாழ்க்கையை நிகழும் சம்பவங்களை ஆவணப்படமாக எடுக்கிறார் நடிகை ஜோதிகா.

படத்தில் மூன்று மாஜி ஹீரோயின்களை நடிக்க வைத்தது ஏன் என்பது பற்றி இயக்குனர் பிரம்மா கூறுகையில், ‘’இந்த கதைக்கு மூன்று விதமான குணாதிசயங்கள் கொண்ட பெண்கள் தேவைப்பட்டார்கள். மக்களுக்கு ஏற்கனவே அறிமுகமான தனித்தனி குணாதிசயங்கள் கொண்டவர்களை நடிக்க வைத்தால் மக்களுக்கு சொல்ல வந்த விஷயம் எளிதாக சென்றடையும் என்பதால் அவர்களை தேர்வு செய்தேன். இந்த மூவரின் படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். ஊர்வசி எதையும் ஜாலியாக எடுத்துக் கொள்கிற கேரக்டர், சரண்யா குடும்ப பாசம் கொண்டவர், பானுப்பிரியா பயந்த சுபாவம். இந்த குணாசிதியங்கள் அவர்களின் படங்களில் வெளிப்பட்டவை. அது எனக்கு தேவைப்பட்டது. அதற்காக அவர்களை தேர்வு செய்து நடிக்க வைத்தேன்’’ என்கிறார் இயக்குனர் பிரம்மா.

do you know the story of magalir mattum

அடுத்த செய்தி

டிரெண்டிங்