ஆப்நகரம்

சிறுத்தை சிவா தம்பி 'பாலாவிற்கு' டாக்டர் பட்டம்!

மனிதாபிமான செயல்பாடுகளுக்காக நடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Jan 2021, 7:42 pm
2002ஆம் ஆண்டு 'அன்பு' என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் நடிகர் பாலா. பின்னர் காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், வீரம் உட்பட சில படங்களில் நடித்தார். இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர், மலையாள திரையுலகிலும் பிசியான நடிகராக இருந்து வருகிறார்.
Samayam Tamil நடிகர் பாலா
நடிகர் பாலா


இயக்குநர் சிவா, ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர் எனப் பன்முகம் கொண்டவர். சிறுத்தை திரைப்படத்தை இயக்கி புகழ் பெற்றதால், சிறுத்தை சிவா என்று இவர் அழைக்கப்படுகிறார். இவர் அஜித் குமார் நடிப்பில் இயக்கிய 'வீரம்' திரைப்படமும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. பின்னர் இவர் மீண்டும் நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து பணியாற்றிய 'வேதாளம்' திரைப்படமானது, 2015 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியானது. மூன்றாவது முறையாக அஜித்குமார் மற்றும் சிவா கூட்டணியில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான 'விவேகம்' திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றபோதிலும் நல்ல வருவாய் ஈட்டித்தந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பாலா, சிவா இயக்கிய 'வீரம்' படத்தில், நடிகர் அஜித்திற்கு, தம்பியாக நடித்து பிரபலம் அடைந்தார். இயக்குநர் ஆகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் பாலா. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ராயல் அமெரிக்கன் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. ஒவ்வொருவருக்கும் அவரவர் துறைகளில் செய்த சாதனை மற்றும் சேவைகளை மையப்படுத்தியே கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம்.

உங்க புருஷன் செய்றது நியாயமா?: அட்லீ மனைவியிடம் விஜய் ரசிகர்கள் புகார்

நடிகர் பாலா கலைத்துறையை சேர்ந்தவர் என்றாலும், அவருக்கு மனிதாபிமானமிக்க செயல்பாடுகள் என்கிற பிரிவில் இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் பாலா, தனது ‘நடிகர் பாலா தொண்டு நிறுவனம்' மூலமாக பல்வேறு வகையில் உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக இந்த கொரோனா தாக்கம் ஏற்பட்ட காலகட்டத்தில் சுமார் 250 குடும்பங்களைத் தத்தெடுத்துள்ளார்

இதையடுத்து வரும் 24ஆம் தேதி, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், பாலாவை கவுரவிக்க இருக்கிறார். இந்த டாக்டர் பட்டம் கிடைத்தது பற்றி பாலா கூறுகையில், "யாருமே நூறு வயது வரை வாழப்போவது கிடையாது. நாலு பேருக்கு நம்மால் நல்லது செய்ய முடியும் என்பதற்கு எனக்கு கிடைத்துள்ள பெரிய அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன். இப்போது என் பொறுப்பு இன்னும் கூடுதலாகி இருப்பதாக நினைக்கிறேன்.

முன்னைவிட இன்னும் முழு வீச்சில் எனது சமூக சேவைகள் தொடரும். மேலும் இதை பார்க்கும்போது இதுபோன்று மனிதாபிமானத்துடன் உதவி செய்ய நினைக்கும் பலருக்கும் இது உத்வேகம் தருவதாக இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த கவுரவ டாக்டர் பட்டம் இதற்கு முன்பு வட இந்தியாவில் ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் தற்போது நடிகர் பாலாவுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்