ஆப்நகரம்

வழிபாட்டு இடங்களில் கூடி குழப்பம் உண்டாக்க இது நேரமல்ல: ஏ.ஆர்.ரகுமான்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கொரோனவுடன் போராடி வரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் மத வழிபாடு இடங்களில் கூடுபவர்களுக்கும் அறிவுரை கூறியுள்ளார்.

Samayam Tamil 2 Apr 2020, 12:08 pm
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லியில் நடந்த இஸ்லாமிய மத மாநாட்டில் பங்கேற்றவர்கள் பலருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது கொரோனா உறுதியாகியுள்ள 234 நபர்களில் 190 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள்.
Samayam Tamil A.R.Rahman


கொரோனா மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு நடவைடிக்கைகளை அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமூக வலைத்தளத்தில் கொரோனா பற்றி பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது..

"இந்த செய்தி இந்தியா முழுவதும் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மற்ற மருத்துவமனை பணியாளர்களுக்கு நன்றி செலுத்த தான். அவர்கள் தைரியம், சுயநலமில்லா சேவையை பாராட்டுகிறேன். இவ்வளவு பயங்கரமான நோயை சமாளிக்க அவர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் உயிரை பணயம் வைத்து நம் உயிரை காப்பாற்றுகிறார்கள்."

"கண்ணனுக்கு தெரியாத எதிரியுடன் போராட நம்மிடம் இருக்கும் வேற்றுமையை மறந்து ஒன்று சேர வேண்டிய நேரம் இது. நம் மனிதநேயத்தை காட்ட வேண்டிய நேரம் இது. வீட்டின் அருகில் இருபவர்களுக்கு, முதியவர்களுக்கு, ஏழைகளுக்கு, புலம்பெயர்ந்த பணியாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும்."

"கடவுள் நம் இதயத்தில் தான் இருக்கிறார், வழிபாட்டு இடங்களில் கூட்டமாக கூடி குழப்பம் உண்டாக்க இது நேரமல்ல. அரசு சொல்வதை கேளுங்கள். இன்னும் சில வாரங்கள் தனிமை படுத்திக்கொண்டால் இன்னும் பல வருடங்கள் நமக்கு கிடைக்கும். வைரஸை பரப்பி உங்கள் உடன் இருப்பவர்களை தீங்கு விளைவிக்காதீர்கள்."

"உங்களுக்குள் வைரஸ் இருக்கிறது என உங்களுக்கே கூட தெரியாமல் இருக்கலாம். அதனால் மற்றவர்களுக்கு பரவும். மேலும் தவறான செய்திகளை பரப்பி பீதி உருவாக்க இது நேரமல்ல. சிந்தித்து செயல்படுவோம். பல லட்சம் மக்களின் உயிர் நம் கையில் தான் இருக்கிறது" என ரகுமான் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்