ஆப்நகரம்

போதை பொருள் பதுக்கல் வழக்கு - ராணா எச்சரிக்கை!

தன்னைப் பற்றி வதந்தி பரப்புவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ‘பாகுபலி’ வில்லன் நடிகர் ராணா.

TNN 8 Aug 2017, 6:23 pm
தன்னைப் பற்றி வதந்தி பரப்புவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ‘பாகுபலி’ வில்லன் நடிகர் ராணா.
Samayam Tamil dont spread rumours warning from rana
போதை பொருள் பதுக்கல் வழக்கு - ராணா எச்சரிக்கை!


கடந்த இரண்டு மூன்று வாரங்களாகவே டோலிவுட்டில் போதை மருந்து பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த பிரச்னை தெலுங்கு நட்சத்திரங்கள் ரவிதேஜா, தருண், நவ்தீப், சார்மி, முமைத்கான், இயக்குனர் புரி ஜகநாத் உள்ளிட்ட 12 பேர் மீது போதை மருந்து புகார் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போதை மருந்து தடுப்பு பிரிவு அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

இந்த பரபரப்பு தற்போது ஓய்ந்திருந்த நிலையில் நடிகர் ராணாவுக்கு வெளிநாட்டிலிருந்து ஒரு பார்சல் வந்தது. வந்த பார்சல் பற்றி தகவல் அறிந்த அமலாக்க அதிகாரிகள் ராணாவிடம் விசாரணை செய்தனர். பார்சலில் வந்த பொருள் என்ன என்று விளக்கம் கேட்டனர். இந்த சம்பவத்தை சிலர் போதை மருந்து விவகாரத்தோடு சம்பந்தப்படுத்தி வதந்தியை பரப்பியுள்ளனர்.

இதையறிந்து கோபமடைந்த ராணா, இவ்வாறு விளக்கமளித்துள்ளார். ‘எனக்கு ஒரு பார்சல் வந்தது உண்மைதான். எனது அறைக்கு தேவையான மரச் சாமான்களை வெளிநாட்டிலிருந்து வரவழைத்திருந்தேன். மற்றபடி எதுவும் இல்லை. இதை பெரிய விவகாரம்போல் சித்தரிப்பதும், ஊதிபெரிதாக்குவதும் சரியல்ல. தவறான வதந்தியைப் பரப்புவோர் இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள்’’ என்று கண்டிப்புடன் கூறினார் ராணா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்