ஆப்நகரம்

என் கணவர் குடும்பத்தை சும்மா விடாதம்மா: மெசேஜ் அனுப்பிவிட்டு பாடகி தற்கொலை

இளம் பாடகி சுஷ்மிதா வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Samayam Tamil 18 Feb 2020, 1:06 pm
இளம் பாடகி சுஷ்மிதா வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Samayam Tamil dowry harassment sandalwood singer sushmita commits suicide
என் கணவர் குடும்பத்தை சும்மா விடாதம்மா: மெசேஜ் அனுப்பிவிட்டு பாடகி தற்கொலை


சுஷ்மிதா

கன்னட படங்களில் பாடி வந்தவர் சுஷ்மிதா(26). அவருக்கும், கர்நாடக மாநிலம் பெங்களூரில் கார் ஷோரூம் ஒன்றில் மேனேஜராக இருக்கும் சரத் என்பவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சுஷ்மிதா தன் கணவருடன் பெங்களூரில் உள்ள குமராசாமி லேஅவுட் பகுதியில் வசித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சரத்துடன் சண்டை போட்டுவிட்டு சுஷ்மிதா பெங்களூர் நாகர்பாவி பகுதியில் இருக்கும் தன் அம்மா வீட்டுற்கு சென்றுள்ளார்.

தற்கொலை

ஞாயிற்றுக்கிழமை இரவு அம்மா மீனாட்சி, தம்பி சச்சினுடன் சேர்ந்து சாப்பிட்ட சுஷ்மிதா சகஜமாக பேசியுள்ளார். பின்னர் தூங்கப் போகிறேன் என்று தன் அறைக்கு சென்றுள்ளார். அறைக்கு சென்ற சுஷ்மிதா தன் அம்மா மற்றும் தம்பிக்கு வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த மெசேஜை தம்பி சச்சின் காலையில் பார்த்துவிட்டு அக்காவின் அறைக்கு ஓடினால் அவர் தூக்கில் பிணமாகத் தொங்கினார்.

கணவர்

அந்த வாட்ஸ்ஆப் மெசேஜில் சுஷ்மிதா கூறியிருப்பதாவது, அம்மா, என்னை மன்னித்துவிடுங்கள். என் கணவரின் பெரியம்மா வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்தினார். வீட்டை விட்டு வெளியேறுமாறு அடிக்கடி கூறினார். அவர்களை சும்மா விடாதீர்கள். சரத், அவரின் பெரியம்மா வைதேகி, சகோதரி கீதா தான் என் மரணத்திற்கு காரணம். நான் எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் மனம் இறங்கவில்லை. அவர்கள் வீட்டில் நான் சாக விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார் சுஷ்மிதா.

வரதட்சணை கொடுமை

சுஷ்மிதா அந்த மெசேஜில் மேலும் கூறியிருப்பதாவது, திருமணமான நாளில் இருந்து இந்த கொடுமை நடந்தது. இதை நான் யாரிடமும் கூறவில்லை. நம் சொந்த ஊரில் என் உடலை எரித்து விடுங்கள் அல்லது புதைத்து விடுங்கள். என் தம்பி தான் இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும். என் கணவர் வீட்டாரை சும்மா விடாதீர்கள். இல்லை என்றால் என் ஆத்மா சாந்தியடையாது. உங்களுக்கு தம்பி இருக்கிறான் அம்மா. அவனை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள். என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா என்று தெரிவித்துள்ளார்.

போலீஸ்

சுஷ்மிதா தற்கொலை தொடர்பாக பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷ்மிதாவின் கணவர், அவரின் பெரியம்மா, சகோதரி ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். போலீசார் அவர்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மூன்று பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சுஷ்மிதாவின் முடிவுக்கு வரதட்சணை கொடுமை தான் காரணம் என்று அவரின் அம்மா மீனாட்சி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்