ஆப்நகரம்

திரௌபதி கதை உண்மை சம்பவம்: ஆதாரத்தை வெளியிட்ட இயக்குனர்

திரௌபதி திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையின் உருவானது என இயக்குனர் மோகன்.ஜி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 3 Mar 2020, 9:22 am
காதல், ஆக்ஷன், ஹாரர் என பல்வேறு விதமான படங்கள் தமிழ் சினிமாவில் வந்தாலும் சமீப காலத்தில் ஜாதி பற்றிய படங்கள் அதிகம் வரத் துவங்கிவிட்டன.
Samayam Tamil Draupathi


மேல்ஜாதியினர் செய்யும் வன்முறைகள் மற்றும் ஆணவ கொலைகள் பற்றி படங்கள் ஒருபுறம் வந்தால், தற்போது அதற்கு போட்டியாக தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்கும் விதமாக நாடக காதல் பற்றி திரௌபதி என படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

திரௌபதி படத்தின் ட்ரெய்லரே பெரிய சர்ச்சையை சந்தித்தது. அதையெல்லாம் கடந்து சென்ற வாரம் திரைக்கு வந்து நல்ல வசூலும் குவித்து வருகிறது. இந்த வருடம் வெளியான படங்களில் தர்பார் படத்திற்கு அடுத்து இந்த படத்திற்கு தான் நல்ல வரவேற்பு என சில திரையரங்கங்களும் கூறியுள்ளன. அதை நிரூபிக்கும் விதமாக வசூலும் வந்து கொண்டிருக்கிறது.

படத்திற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரண்டு சாரார் சமூக வலைதளங்களிலும் மோதிக்கொண்டுவரும் இந்த வேளையில் இயக்குனர் மோகன்.ஜி இந்த படத்தின் கதை பற்றி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

ஒரு உண்மையான சம்பவத்தை மையப்படுத்தி தான் இந்த கதையை தான் எழுதியதாக கூறியுள்ள அவர், செய்தித்தாளில் வந்த ஒரு செய்தியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

"உண்மை சம்பவத்தின் ஆதாரம்.. 2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த அறிக்கை தான் #திரெளபதி திரைப்பட பதிவாக உருவாக காரணமாக அமைந்த முதல் புள்ளி" என தன் ட்விட்டில் குறிப்பிட்டுள்ளார் மோகன் ஜி.


இதற்கு முன்பே முக்கிய அரசியல் கட்சியின் தலைவர் ராமதாஸ் அவர்கள் பேசும்போது தான் 2014ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை தான் இந்த படம் உருவாக காரணம் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரௌபதி படம் உருவாக நான் வெளியிட்ட 'அந்த' அறிக்கையே காரணம்: ராமதாஸ்

அடுத்த செய்தி

டிரெண்டிங்