ஆப்நகரம்

டபுள் ஹீரோயினி படத்தில் நடித்தால் என்னை பாதிக்காது: நந்திதா!

டபுள் ஹீரோயின் படத்தில் நடிப்பதால் எனக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று நடிகை நந்திதா கூறுகிறார்.

TNN 20 Aug 2016, 5:39 pm
டபுள் ஹீரோயின் படத்தில் நடிப்பதால் எனக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று நடிகை நந்திதா கூறுகிறார்.
Samayam Tamil dual heroine role doenot affect me attakathi nandita
டபுள் ஹீரோயினி படத்தில் நடித்தால் என்னை பாதிக்காது: நந்திதா!


தமிழில் ‘அட்டகத்தி’ படம் மூலம் அறிமுகமானவர் நந்திதா. இடையில் அவரது மார்க்கெட் சரிந்தாலும் தற்போது ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் ‘உள்குத்து’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
‘அட்டகத்தி’ படத்திற்குப் பிறகு நந்திதா ‘உள்குத்து’ படத்தின் மூலம் மீண்டும் தினேசுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் இதுவரை நடிக்காத சற்று நெகடீவ் ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நந்திதா கூறுகையில், ‘‘இயக்குனர் செல்வராகவன் படத்தில் வித்தியாசமான ரோலில்தான் நடிக்கிறேன். ஆனால் அது எந்தமாதிரியான வேடம் என்பதை இப்போதே சொல்லிவிடமுடியாது. அதோடு சிலர், டபுள் ஹீரோயினி கதைகளில் நடிக்கிறீர்களே. உங்களை டம்மி பண்ணி விடமாட்டார்களா? என்கிறார்கள். அப்படிப் பார்த்தால் டபுள் ஹீரோயினி படங்களான ‘எதிர்நீச்சல்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறேன். ஆனால், இன்னொரு ஹீரோயினும் அந்த படங்களில் இருந்தது என்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. எனக்கான கேரக்டர் வலுவானதாக இருக்கும் பட்சத்தில் நான் யாரை நினைத்தும் பயந்ததில்லை. அப்படித்தான் இந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திலும் ரெஜினா இருந்தும் நான் கவலைப்படவில்லை. டபுள் ஹீரோயினி கதை என்றாலே நமக்கு ஹிட்டுதான் என்கிற பாசிட்டீவ் மனநிலையில்தான் நடித்து வருகிறேன் என்கிறார் நந்திதா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்