ஆப்நகரம்

‘சாஹோ’ படப்பிடிப்பை துபாயில் நடத்த அனுமதி மறுப்பு!

பிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ படத்தின் சண்டைக் காட்சியை துபாயில் நடத்துவதற்கு அனுமதி கேட்டதற்கு துபாய் அரசாங்கம் மறுத்துள்ளது..

Samayam Tamil 1 Mar 2018, 4:09 pm
பிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ படத்தின் சண்டைக் காட்சியை துபாயில் நடத்துவதற்கு அனுமதி கேட்டதற்கு துபாய் அரசாங்கம் மறுத்துள்ளது..
Samayam Tamil dubai government denied permission to saaho shooting
‘சாஹோ’ படப்பிடிப்பை துபாயில் நடத்த அனுமதி மறுப்பு!


நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ படங்களை அடுத்து தற்போது ‘சாஹோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. படத்தை சுஜித் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். படத்தில் வில்லனாக நீல் நிதின் முகேஷ் நடிக்கிறார்.

இந்த படத்தின் 60 சதவீத ஷூட்டிங் முடிந்துள்ளது. முக்கிய காட்சிகளை துபாயில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளையும் சேஸிங் காட்சிகளையும் துபாயில் எடுக்க அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் இம்மாதம் துவக்கத்தில் படக்குழு துபாய் செல்ல இருந்த பயண திட்டம் ரத்து செய்யப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்