ஆப்நகரம்

'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' - முக்கிய அப்டேட் வெளியிட்ட படக்குழு!

ரஞ்சித், தினேஷ் கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 8 May 2019, 4:53 pm
பா.ரஞ்சித் தயாரிப்பில் தினேஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’. இதை ரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்குகிறார். தென்மா இசையமைக்கிறார்.
Samayam Tamil Attakathi Dinesh


அட்டக்கத்தி படத்திற்கு பின், மீண்டும் ரஞ்சித் - தினேஷ் கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்தப் படம் சமூகம், அரசியல் சார்ந்த கதைக் களத்தில் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படக்குழு முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதாவது, பெரும் கொண்டாட்டத்தோடு இப் படத்தை தொடங்கி, ஒவ்வொரு தருணங்களையும், நிகழ்வுகளையும் உண்மையின் பக்கம் நின்று ஜனரஞ்சகமாக அனைவரும் ரசித்து கொண்டாடும் வகையில் ஒரு படைப்பை உருவாக்கி, இன்று படத்தின் டப்பிங் பணிகளை துவங்குகிறோம்.

தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பின் இரண்டாவது தயாரிப்பு தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தும் ஒரு படைப்பாக இருக்கும் என்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.

இயக்குனர் அதியன் ஆதிரை வட தமிழகத்தின் வாழ்வியலை அனைவரும் குடும்பமாக ரசிக்கும் விதமாக படமாக்கியிருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்