ஆப்நகரம்

ஹீரோயின் அவதாரம் எடுக்கும் டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி

இயக்குனர் சுசீந்திரன் மற்றும் சசி ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் எஸ் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் நகல்.

TNN 1 Mar 2017, 10:17 pm
இயக்குனர் சுசீந்திரன் மற்றும் சசி ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் எஸ் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் நகல். இப்படத்தை கரிஸ்மாட்டிக் கிரியேஷன்ஸ் சார்பில் மணிகண்டன் சிவதாஸ் தயாரிக்கிறார். ஒரேயொரு ரோலை மட்டும் மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil dubsmash fame mirnalini turns heroine in a first movie
ஹீரோயின் அவதாரம் எடுக்கும் டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி


இப்படம் தொடர்பாக இயக்குனர் கூறுகையில், நகல் படம் ஒரேயொரு ரோலை மட்டும் மையமாக வைத்து உருவாகி வருகிறது. அதுவும் ஹீரோயினுக்கான ரோல். இதில், நடிப்பதற்கு ஹீரோயினை தேடுவது பெரும் சவாலாக இருந்தது. இந்நிலையில், இந்த ரோலுக்கு முற்றிலும் உயிர் தரக்கூடிய ஒரு நடிகை தான் எங்கள் படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு தான் நாங்கள் மிருணாளினியை தேர்வு செய்தோம்.

குறுகிய காலத்தில் தன்னுடைய டப்ஸ்மாஷ் திறமையால் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர். இவர் நடிக்க வரமாட்டாரா என்று ஏங்கும் ரசிகர்களும் உண்டு. இந்நிலையில், இப்படத்தின் கதையை அவரிடம் தெரிவிக்க உடனே நடிக்க ஒப்புக்கொண்டார் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்