ஆப்நகரம்

தந்தையின் 400வது படத்தில் நடிக்கும் மகன்!

தந்தை மம்முட்டியின் 400வது படத்தில் மகன் துல்கர் சல்மான் இணைந்து நடிக்கவுள்ளார்.

TNN 25 May 2017, 3:13 pm
தந்தை மம்முட்டியின் 400வது படத்தில் மகன் துல்கர் சல்மான் இணைந்து நடிக்கவுள்ளார்.
Samayam Tamil dulquer salman will act with his dad 400th movie
தந்தையின் 400வது படத்தில் நடிக்கும் மகன்!


படங்களில் கதாநாயகர்களாக நிஜத்தில் அப்பாவும் மகனும் சேர்ந்து நடிப்பது ரொம்பவே அபூர்வம். இந்திய திரையுலகை எடுத்துக்கொண்டால் ஒரு சிலருக்கே அந்த அரிய சந்தர்ப்பம் வாய்த்துள்ளது. தமிழில், சிவாஜி -பிரபு, சத்யராஜ் -சிபிராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

மலையாள திரையுலகில் கூட இந்த சாதனை நிறைவேற்றப்படாமலே இருக்கிறது. இப்போது மம்முட்டி- துல்கர் சல்மான் என தந்தை மகன் இருவருமே மலையாள சினிமாவில் கதாநாயகர்களாக முன்னணியில் இருப்பவர்கள் இவர்கள் இந்த சாதனையை நிகழ்த்தக்கூடும் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்துள்ளது.

இந்தநிலையில் மம்முட்டி தற்போது 395 படங்களில் நடித்து முடித்துவிட்டார். தற்போது மூன்று படங்களில் நடித்தும் வருகிறார். அனேகமாக இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட துவக்கத்தில் அவரது 400வது படம் ஆரம்பிக்கப்பட்டு விடும். ஒரு ஹீரோவுக்கு 400வது படம் என்பது மிகப்பெரிய பொக்கிஷம். அதனால் அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த படத்தில் தனது தந்தையுடன் துல்கர் சல்மான் இணைந்து நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்