ஆப்நகரம்

படப்பிடிப்பின் போது அஜீத் ஒத்திகை பார்க்கமாட்டார்: ராஜகுமாரன்!

அஜீத் படப்பிடிப்பின்போது ஒத்திகை பார்க்காமல் நேரடியாக நடிக்கப் போய்விடுவார் என்று தேவயானியின் கணவரும், இயக்குனருமான இராஜகுமாரன் கூறியுள்ளார்.

TNN 15 Mar 2017, 6:52 pm
அஜீத் படப்பிடிப்பின்போது ஒத்திகை பார்க்காமல் நேரடியாக நடிக்கப் போய்விடுவார் என்று தேவயானியின் கணவரும், இயக்குனருமான இராஜகுமாரன் கூறியுள்ளார்.
Samayam Tamil during the shooting spot ajith didnt see walkthrough rajakumaran
படப்பிடிப்பின் போது அஜீத் ஒத்திகை பார்க்கமாட்டார்: ராஜகுமாரன்!


நடிகர் அஜீத்தை வைத்து ‘நீ வருவாய் என’ படத்தை இயக்கியவர் இயக்குனர் இராஜகுமாரன். இப்போது இவர் விஜய் மில்டன் இயக்கத்தில் ‘கடுகு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் அஜீத் குறித்து, இயக்குனர் இராஜகுமாரன் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

அஜீத் ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ படத்தில் நடிக்கும்போது நான் உதவி இயக்குனராக பணியாற்றினேன். படத்தின் காட்சிகளில் நேரடியாக நடிக்கப் போய்விடுவார். நான் ஒத்திகை பார்த்துக் கொள்ளலாம் என்பேன். அவர் வேண்டாம் என்பார். மீண்டும் சொல்வேன் அவர் மறுத்துவிடுவார். இந்த விசயத்தில் எங்கள் இருவருக்கும் சிறு சிறு சண்டைகள், விவாதங்கள் வரும். அஜீத்திடம் அதிகம் பழகியதும் சண்டை போட்டதும் நான் ஒருவனாகத்தான் இருக்க முடியும். மேலும் அவர் ஒத்திகை பார்க்காமலேயே நேரடியாக கேமரா முன் நடித்து அசத்தி விடுவார்’’ என்றார் இயக்குனர் ராஜகுமாரன்.

During the shooting spot Ajith didn't see Walkthrough: rajakumaran

அடுத்த செய்தி

டிரெண்டிங்