ஆப்நகரம்

விமான நிலையத்தில் ஸ்ரீதேவியின் உடல்

ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவுக்கு கொண்டுவரப்படுவதற்காக துபாய் விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Feb 2018, 5:31 pm
துபாய்: ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவுக்கு கொண்டுவரப்படுவதற்காக துபாய் விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
Samayam Tamil embraer aircraft with sridevis mortal remains scheduled to take off from dubai airport
விமான நிலையத்தில் ஸ்ரீதேவியின் உடல்


நடிகை ஸ்ரீதேவி தமிழ் உட்பட இந்திய மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் துபாயில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இவரது உடலை துபாய் அரசின் சட்ட நடைமுறைகளின் படி மும்பைக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

துபாய் அரசு திங்கட்கிழமை ஸ்ரீதேவி மரணத்துக்கு இறப்புச் சான்றிதழ் அளித்தைத் தொடர்ந்து இன்று காவல்துறை உடல் இந்தியாவுக்குக் கொண்டு செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து, தனி விமானம் மூலம் துபாயில் இருந்து மும்பைக்கு அவரது உடல் கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக, துபாய் விமான நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டிருக்கும் ஸ்ரீதேவியின் உடல் மாலை 6.30 மணிக்கு துபாயில் இருந்து கிளம்பி இரவு 9.30 மணிக்கு மும்பை விமான நிலையம் வந்துசேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்