ஆப்நகரம்

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுரேஷ் பதிலுக்கு விளக்கமளித்த பாடகி சின்மயி!

நிகழ்ச்சி ஏற்பட்டாளர் சுரேஷ் வெளியிட்ட வீடியோவுக்கு, பாடகி சின்மயி தற்போது விளக்கமளித்துள்ளார்.

Samayam Tamil 12 Oct 2018, 5:26 pm
ஈழத்தமிழர்களுக்காக நடத்தப்பட்ட ‘வீழ மாட்டோம்’ இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றபோதுதான், வைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு தனியாக வருமாறு அழைத்ததாக சின்மயி புகார் தெரிவித்திருந்தார்.
Samayam Tamil chin suresh


அது பற்றி அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சுரேஷ் என்பவர் நேற்று வெளியிட்ட வீடியோவில் “சின்மயி என் வீட்டில் தான் தங்கினார். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தெரிவிப்பதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்“ என கூறியிருந்தார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஏற்பட்டாளர் சுரேஷ் வெளியிட்ட வீடியோவுக்கு, பாடகி சின்மயி தற்போது விளக்கமளித்துள்ளார். “ஆமாம். அவர் வீட்டில் தான் தங்கினோம். பாடகர் மாணிக்க விநாயகமும், எங்களுடன் தங்கினார். ஆனால் நிகழ்ச்சி முடிந்தவுடன் அவரை ஊருக்கு அனுப்பி விட்டார்கள். ஆனால் எங்களுக்கு டிக்கெட் புக் பண்ணவில்லை.

வேலைக்கு செல்லவேண்டும் என சொல்லிவிட்டு சுரேஷ், எங்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். அப்போது அவருக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது. அவர் மனைவிக்கும் தெரியாது. வைரமுத்து பற்றி பல விஷயங்கள் அவருக்கு தெரியும். ஆனால் அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது” என கூறியுள்ளார் சின்மயி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்