ஆப்நகரம்

“நான் நடித்த ஒவ்வொரு படமும் எனக்கு முதல் படம்தான்” : சஞ்சிதா ஷெட்டி

நான் நடித்த ஒவ்வொரு படமும் எனக்கு முதல் படம்தான் என்று நடிகை சஞ்சிதா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 22 Feb 2018, 1:39 pm
நான் நடித்த ஒவ்வொரு படமும் எனக்கு முதல் படம்தான் என்று நடிகை சஞ்சிதா ஷெட்டி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil every film i have is the first film for me sanchita shetty
“நான் நடித்த ஒவ்வொரு படமும் எனக்கு முதல் படம்தான்” : சஞ்சிதா ஷெட்டி


விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஏண்டா தலையில எண்ண வெக்கல’. இந்தப் படத்தின் நாயகனாக அஸார் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹானா இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராகவும் உள்ளார்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சஞ்சிதா ஷெட்டி பேசுகையில், “நான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் என் முதல் படமாகத்தான் நினைத்து நடிக்கிறேன். படத்திற்கு ஏ.ஆர்.ரெஹானா நல்ல இசையை தந்திருக்காங்க. படத்தில் இடம்பெற்ற அம்மா பாடல் என இரண்டு பாடல்கள் எனக்குப் பிடித்துள்ளன. ஒரு பெண் தயாரிப்பாளரின் படத்தில் நடித்தது புது அனுபவம். இந்த தலைப்பு பலரையும் படத்தைப் பற்றி பேச வைத்துள்ளது” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்