ஆப்நகரம்

”பாகிஸ்தான் நடிகர் நடித்தால் ராணுவத்துக்கு நிதி தர வேண்டும்”-ராஜ் தாக்கரே

பாகிஸ்தான் நடிகர்களை வைத்து திரைப்படம் எடுக்கும் இந்திய தயாரிப்பாளர்கள் இந்திய ராணுவத்திற்கு நிதி அளிக்க வேண்டும் என நவ நிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

TNN 23 Oct 2016, 12:11 pm
பாகிஸ்தான் நடிகர்களை வைத்து திரைப்படம் எடுக்கும் இந்திய தயாரிப்பாளர்கள் இந்திய ராணுவத்திற்கு நிதி அளிக்க வேண்டும் என நவ நிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
Samayam Tamil every producer who has cast pakistani artist must pay rs 5 crore to army relief fund raj thackeray
”பாகிஸ்தான் நடிகர் நடித்தால் ராணுவத்துக்கு நிதி தர வேண்டும்”-ராஜ் தாக்கரே


சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அசாதாரண சூழல் நிலவியதால்,இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் கலைஞர்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என நவநிர்மாண் சேனா கட்சி எச்சரிக்கை விடுத்தது.மேலும் பாகிஸ்தான் நடிகர்கள் நடித்துள்ள திரைப்படங்களை மகராஷ்டிராவில் உள்ள தியேட்டர்களில் வெளியிட்டால்,அந்த தியேட்டர்களை அடித்து நொறுக்குவோம் எனவும் தெரிவித்திருந்தது.

இதனால் பாகிஸ்தான் நடிகரான பாஃவத் கான் என்பவர் நடித்துள்ள ”ஏ தில் ஹை முஷ்கில்” என்ற திரைப்படத்தை திரையிட நவநிர்மாண் சேனா எதிர்ப்பு தெரிவித்து வந்தது.இந்த விவாகாரம் குறித்து நவநிர்மாண் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவுடன் மகராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதனை தொடர்ந்து “இந்த திரைப்படம் இந்திய ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணம்.” என்ற அறிவிப்புடன் தொடங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்,தனது எதிர்ப்பை நவநிர்மாண் சேனா விலக்கிக் கொண்டது.

இந்நிலையில் இனி பாகிஸ்தான் நடிகர்களை வைத்து திரைப்படம் எடுக்க நினைக்கும் இந்திய தயாரிப்பாளர்கள்,இந்திய ராணுவ நல நிதிக்கு ஐந்து கோடி அளிக்க வேண்டும் என நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

Every producer who has cast Pakistani artist must pay Rs 5 crore to Army relief fund: Raj Thackeray

அடுத்த செய்தி

டிரெண்டிங்