ஆப்நகரம்

ஆர்யாவுக்கு கல்யாணமே நடக்காது..!

‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி முடிவில் ஆர்யாவுக்கு திருமணம் நடக்காது என்று இயக்குனர் பிரகாஷ் க;றியுள்ளார்.

Samayam Tamil 10 Apr 2018, 3:33 pm
‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி முடிவில் ஆர்யாவுக்கு திருமணம் நடக்காது என்று இயக்குனர் பிரகாஷ் க;றியுள்ளார்.
Samayam Tamil evm


ஆர்யா கலந்து கொண்டு வரும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி பல சர்ச்சைகளுக்கு நடுவே தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி மூலம் நடிகர் ஆர்யாவுக்கு ஏற்ற நல்ல மணப்பெண்ணை தேடுகின்றனர் என்று சொல்லி நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள். இந்தப் போட்டியில் 16 பெண்கள் கலந்துகொண்டனர்.

தற்போது இந்த நிகழ்ச்சியில் சுஸானா, சீதாலெட்சுமி, அகாதா என மூவர் மட்டும் தான் இருக்கிறார்கள். இவர்களில் ஆர்யாவுடன் கைகோர்ப்பது யார் என்பது தான் சர்ப்பிரைஸ். இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் இயக்குனர் பிரகாஷ், இது பெண்கள் தங்கள் வாழ்க்கை துணையை தேர்தெடுக்க கிடைத்த சுதந்திரம். இது முழுக்க முழுக்க போட்டியாளரின் விருப்பம் தான். கடைசியாக வெற்றி பெரும் போட்டியாளர் ஆர்யாவை வேண்டாம் என சொன்னால் திருமணம் நடக்காது என கூறியுள்ளார். இதில் எதோ இருக்கிறது என பலரும் சொல்லிவரும் நேரத்தில் இயக்குனர் சொன்னது பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்