ஆப்நகரம்

நயன்தாராவுக்காக உருவாகும் பிரத்யேக செட்

அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் 'அறம்' படத்துக்காக பிரத்யேக செட் வடிவமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNN 22 Dec 2016, 2:32 pm
சென்னை: அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் 'அறம்' படத்துக்காக பிரத்யேக செட் வடிவமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil exciting underground sets constructed for nayanthara starrer aramm
நயன்தாராவுக்காக உருவாகும் பிரத்யேக செட்


நயன்தாரா நடிக்கும் 55வது படத்தின் 'அறம்' என்ற தலைப்பு அவரது பிறந்தநாளான நவ.18ஆம் தேதி வெளியிடப்பட்டு, அமோக வரவேற்பை பெற்றது. சமீபகாலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா இப்படத்தில் நேர்மையான ஐஏஎஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கோட்பாடி ஜெ ராஜேஷ் தயாரித்து வரும் இப்படத்தில் தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் லால்குடி இளையராஜா, பிரத்யேக செட் ஒன்றை வடிவமைத்து வருகிறார். இப்படத்தில், நிலத்தடி குழாய் ஒன்றில் மாட்டிக்கொள்ளும் குழந்தையை மீட்கும் முயற்சியில் நயன்தாரா ஈடுபடுகிறார். இதற்காக 100 அடிக்கு அமைக்கப்பட்டுள்ள நிலத்தடி குழாயில் மாவட்ட ஆட்சியரான நயன்தாரா தனது காட்சிகளில் நடித்து வருகிறார். இன்னும் ஓரிரு நாட்களில் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ராமநாதபுர மாவட்ட ஆட்சியராக நயன்தாரா நடித்துள்ள இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் அங்கேயே படமாக்கப்பட்டுள்ளன. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் 'அறம்' படத்தின் மூலம், மாவட்ட ஆட்சியர் என்ற வார்த்தைக்கு புதியதொரு அர்த்தத்தை தன்னுடைய அசாத்திய நடிப்பால் நயன்தாரா வழங்கி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Shooting for the Gopi Nainar-directed 'Aramm' is currently on, and according to reports, the film’s National Award-winning art director Lalgudi Ilayaraja, has pulled out all the stops for building magnificent underground sets for the film.

அடுத்த செய்தி

டிரெண்டிங்