ஆப்நகரம்

உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது: ரஜினி பற்றி கஸ்தூரி

உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக் கூடாது என்று ரஜினி பற்றி ட்வீட் செய்துள்ளார் கஸ்தூரி.

Samayam Tamil 30 Dec 2020, 9:29 am
2021ம் ஆண்டில் கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக ரஜினிகாந்த் அறிவித்தார். அறிவித்த கையோடு கட்சி துவங்கும் வேலையிலும் ஈடுபட்டார். இதனால் அவர் நிச்சயம் கட்சி துவங்குவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் கட்சி துவங்கும் தேதியை 31ம் தேதி அறிவிக்கிறேன் என்று கூறியிருக்கிறார் ரஜினி, அதனால் நிச்சயம் அவர் கட்சி துவங்க மாட்டார் என்று சிலர் தெரிவித்தனர்.
Samayam Tamil kasthuri


இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார் ரஜினி. அப்பொழுது அவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியதாகிவிட்டது. அவருக்கு பயப்படும்படி எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும் ரத்த அழுத்தம் மீண்டும் உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை செய்தனர்.

ஒரு வாரம் பெட் ரெஸ்ட்டில் இருக்க வலியுறுத்தினார்கள். இதையடுத்து உடல்நலனை மனதில் வைத்து தான் கட்சி துவங்கவில்லை என்று ரஜினி நேற்று அறிவிப்பு வெளியிட்டார். அதில் இருந்து சமூக வலைதளங்களில் ரஜினி பற்றி தான் பேசப்படுகிறது.

இந்நிலையில் ரஜினியின் முடிவு பற்றி கஸ்தூரி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
எதிர்பார்த்ததுதான். எத்தனையோ முறை நான் உட்பட பலரும் சொன்னது தான். எப்பவோ சொல்லியிருந்தால் ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம். வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம்.

இப்பவாச்சும் சொன்னாரே. இப்ப இல்லை, எப்பவுமே இல்லை !

கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம் பெரிது.
உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது. ரஜினி அவர்களின் முடிவுக்கு பாராட்டுக்கள்.
நீங்கள் பூரண நலத்துடன் நிம்மதியாக நீடூழி வாழ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கஸ்தூரியின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

முடிவு எடுத்துவிட்டால் உடனே கட்சி துவங்கிவிட வேண்டும். நாள், கிழமை பார்த்தால் இப்படித் தான் ஆகும். ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று ஒரு சிலர் தான் கவலையில் இருக்கிறார்கள், மற்றவர்களுக்கு மகிழ்ச்சியே.

உங்களின் ட்வீட்டை பார்த்தால் பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பது தெரிகிறது. காலம் தான் சிறந்த மருந்து என்று தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கஸ்தூரி பேட்டி ஒன்றில் கூறியதாவது,

மத்தியில் ஒரே பெரிய கட்சி தான் உள்ளது. தமிழகத்தில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. பிற கட்சிகள் மற்றும் புதிதாக கட்சி துவங்குபவர்களிடம் இருந்தும் அழைப்பு வந்துள்ளது. எந்த கட்சியில் சேர்வேன் என்பதை 20 நாட்களில் அறிவிக்கிறேன் என்றார்.

ரஜினி கட்சியில் சேரச் சொல்லி கஸ்தூரியை அழைத்தார்களா?

அதை பார்த்தவர்கள் ரஜினியின் கட்சியில் இருந்து அழைப்பு வந்திருக்கும் போன்று என்று பேசினார்கள். இந்நிலையில் கஸ்தூரியின் ட்வீட்டை பார்த்து அதை உறுதியே செய்துவிட்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்