ஆப்நகரம்

கல்லூரியில் போலி பட்டமா? ஸ்ரீகாந்தின் மனைவி கோர்ட்டில் ஆஜர்

கல்லூரியில் போலி பட்டம் வழங்கிய வழக்கு நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி கோர்ட்டில் ஆஜரானார்.

TNN 28 Mar 2017, 3:22 pm
கல்லூரியில் போலி பட்டம் வழங்கிய வழக்கு நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி கோர்ட்டில் ஆஜரானார்.
Samayam Tamil fake certificate case srikanth wife vandana and her father appear in ooty court
கல்லூரியில் போலி பட்டமா? ஸ்ரீகாந்தின் மனைவி கோர்ட்டில் ஆஜர்


ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா மற்றும் அவரந்து தந்தை இருவரும் இணைந்து ஊட்டியில் மெரிட் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனத்தை நடந்தி வருகின்றனர். இதில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த கல்லூரியில் படித்த உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பிருத்விராஜ் என்ற மாணவர் கடந்த 2012ம் ஆண்டு ஊட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அந்த புகாரில், நான் ஊட்டியில் இயங்கி வரும் மெரிட் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனத்தில் படித்தேன்.

4 ஆண்டுகள் படித்தால் 3 பட்டங்கள் கிடைக்கும் என்று கல்லூரி நிர்வாகத்தினர் கூறினர். அதன் பேரில் படிப்பு முடிந்ததும் தபால் மூலமாக பட்டத்தை அனுப்பி வைத்தனர். அதனைக் கொண்டு நான் விப்ரோ நிறுவனத்திற்கு நேர்காணலுக்கு சென்றிருந்தேன்.

அப்போது நான் வாங்கிய பட்டத்தைப் பார்த்த அவர்கள் இது போலி பட்டம் என்றனர். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதனால், அண்ணா பல்கலைக்கழகம் சென்று விசாரித்தேன். அவர்களும் அது போலி பட்டம் என்று தெரிவித்தனர். இதன் காரணமாக எனக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே கல்லூரி நிர்வாகம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

இதன் காரணமாக கல்லூரி நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கல்லூரி நிர்வாகிகளான வந்தனா மற்றும் அவரது தந்தை சாரங்கபாணி ஆகியோருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகவில்லை. இந்நிலையில், இறுதியில் இருவர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கும் நிலை ஏற்பட்டதால், இருவரும் நேற்று ஊட்டி கோர்ட்டில் ஆஜராகினர். போலி பட்டம் தொடர்பான வழக்கை வரும் 18ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Fake certificate case: srikanth wife vandana and her father appear in ooty court.

அடுத்த செய்தி

டிரெண்டிங்