ஆப்நகரம்

மார்க்கெட்டை இழந்து வரும் முன்னணி நடிகர்கள்: வளர்ந்து வரும் புதிய ஹீரோக்கள்!

புதிது புதிதாக காமெடியன்கள், ஹீரோக்கள் வளர்ந்து வருவதால், முன்னணி நடிகர்கள் தங்களது மார்க்கெட்டை இழந்து வரும் நிலை தமிழ் சினிமாவில் அரங்கேறி வருகிறது.

Samayam Tamil 21 May 2019, 10:06 am
புதிது புதிதாக காமெடியன்கள், ஹீரோக்கள் வளர்ந்து வருவதால், முன்னணி நடிகர்கள் தங்களது மார்க்கெட்டை இழந்து வரும் நிலை தமிழ் சினிமாவில் அரங்கேறி வருகிறது.
Samayam Tamil jiiva


பொதுவாக, சிவாஜி கணேசன், எம்ஜிஆர், நம்பியார், நாகேஷ் எம்ஆர்ராதா காலங்களில் சினிமா என்றால், பலரிடம் மதிப்பும், மரியாதையும் இருந்தது. அன்றைய காலங்களில் கருத்துள்ள படங்கள் வெளி வந்தது. இவர்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், ராமராஜன் ஆகியோரது படங்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர்களது படங்களிலும் கருத்துள்ள படங்களும், பாடல்களும் இடம் பெற்றிருந்தது.

இவர்களது வரிசையில், 1990ம் ஆண்டுகளில், அஜித், விஜய், விக்ரம், பிரசாந்த், கரண், ஜீவா, தனுஷ், லிவிங்ஸ்டன், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஆனால், இன்றைய காலகட்டங்களில், காமெடியன்கள் வரிசையில், கவுண்டமனி, செந்திலைத் தொடர்ந்து வடிவேலு, சந்தானம், சூரி, ரோபோ சங்கர், சதீஷ், யோகி பாபு ஆகியோரும், ஹீரோக்களை பொறுத்தவரை, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கௌதம் கார்த்திக், சரவணன் மீனாட்சி புகழ் கவின், நகுல், ரியோ ராஜ் ஆகியோர் புதிதாக வந்த ஹீரோக்கள்.

இதில், விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர்களாக இடம் பிடித்துவிட்டனர். ஆனால், ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த பிரசாந்த், ஜீவா ஆகியோருக்கு போதிய சினிமா வாய்ப்பும், கருத்துள்ள படங்களும் அமையவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால், அவர்கள் தங்களது சினிமா மார்க்கெட்டை இழந்து வருகின்றனர்.

ஜீவாவிற்கு நீதானே என் பொன் வசந்தம் மட்டும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற படமாக கருதப்படுகிறது. இப்படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் எந்தப் படமும் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெறுவதில்லை. மாறாக, திரைக்கு வந்த சில நாட்களில் திரையரங்குகளில் இருந்து தூக்கப்படுகிறது.

அண்மையில் கூட ஜீவாவின் நடிப்பில் கீ படம் வெளியானது. ஆனால், சொல்லிக்கொள்ளும்படி இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை. இப்படத்தைத் தொடர்ந்து கொரில்லா, ஜிப்ஸி, சீறு மற்றும் 83 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

இதே போன்று தான் நடிகர் பிரசாந்தும், சினிமா வாய்ப்பில்லாமல், தனது மார்க்கெட்டை இழந்து வருகிறது. கடந்த ஆண்டு இவரது நடிப்பில் ஜானி படம் வெளியானது. ஆனால், இப்படம் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இப்படத்தைத் தொடர்ந்து விநாயா விதேயா ராமா என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். இப்படமும் ஓரளவு வரவேற்பு பெற்றுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து தமிழில் பிரசாந்த் 50 என்ற படம் வரும் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்