ஆப்நகரம்

இரண்டாவது முறை விவாகரத்து பெற்றது ஏன்? பிரபல நடிகை விளக்கம்

பிலபல நடிகை ஒருவர் தனது இரண்டாவது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.

TNN 15 Oct 2016, 2:50 pm
பிலபல நடிகை ஒருவர் தனது இரண்டாவது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.
Samayam Tamil famous actress divorced reason
இரண்டாவது முறை விவாகரத்து பெற்றது ஏன்? பிரபல நடிகை விளக்கம்


தமிழில் வெளியான பன்னீர் புஷ்பங்கள் படத்தில் நாயகி நடித்தவர் சாந்தி கிருஷ்ணா . இவர் மலயாளத்தில் 40 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 1984-ம் ஆண்டு மலையாள நடிகர் ஸ்ரீநாத் என்பவரை சாந்தி கிருஷ்ணா திருமணம் செய்தார். பின்னர் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து கொண்டனர்.

இதனையடுத்து அவர் 1998-ல் கொல்லத்தைச் சேர்ந்த அமெரிக்க தொழில் அதிபரான பஜோர் சதாசிவம் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார்.அவர்கள் இருவர்கிடையேயும் கருத்து வேறூபாடு ஏற்பட்டதால் இரண்டாவது கணவரையும் சாந்தி கிருஷ்ணா பிரிந்தார்.

தனது இரண்டாவது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றது குறித்து ஒரு பேட்டியில் நடிகை சாந்தி கிருஷ்ணன் கூறியதாவது:"நடிப்பிற்காக இரண்டாவது கணவரிடம் இருந்து நான விவாகரத்து பெற்றதாக சிலர் கூறுகின்றனர் . ஆனால் திருமணத்துக்காக என் நடிப்புத் தொழிலை இருமுறை கைவிட்டேன் . இந்நிலையில் இந்த வயதில் நடிப்புகாக ஏன் என் கணவரையும் மகளையும் கைவிடவேண்டும்?சமூகவலைத்தளத்தில் உலவும் இதுபோன்ற செய்திகள் தவறானவை. யார் இதைச் செய்கிறார்கள் எனத் தெரியவில்லை.

என்னுடைய முதல் திருமணமும் தோல்வியில் முடிந்தது. எனவே பிரிவின் வலி எனக்கு நன்றாகத் தெரியும். இரண்டாது முறை வாய்ப்பு கிடைக்கும்போது, நீங்கள் நல்லதொரு மாற்றத்தையே எதிர்பார்ப்பீர்கள். மீண்டும் பிரியத் தோணாது. எனவே என்னால் முடிந்தவரை ஒத்துப்போகப் பார்த்தேன். ஆனால் பிரிவு மீண்டும் நிகழ்ந்துவிட்டது. வாழ்க்கையில் நாம் எதிர்பாராதவையே நடக்கும்" என்று அவர் கூறியுள்ளார்

அடுத்த செய்தி

டிரெண்டிங்