ஆப்நகரம்

விஜய்யை விட சிரஞ்சீவி முக்கியம்! படப்பிடிப்பின் பாதிலேயே ஓடிய நடிகை!

நடிகர் விஜய் படப்பிடிப்பில் நடித்து வந்த பிரபல நடிகை ரம்பா, சிரஞ்சீவி படத்தில் நடிப்பதற்காக படப்பிடிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

Samayam Tamil 11 Apr 2019, 3:46 pm
நடிகர் விஜய் தற்போது கோலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். இவர் புதுபுது இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தவர். அவரை வைத்து இயக்கிய இயக்குனர்கள் எல்லோரும் ‘‘அவர் அதிகம் பேச மாட்டார். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார்’’ என்று பெருமையாகத்தான் பேசுவார்கள்.
Samayam Tamil rambha


இந்நிலையில் நடிகர் விஜய்யை வைத்து ‘நினைத்தேன் வந்தாய்’ படத்தை இயக்கியவர் செல்வபாரதி. அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ரம்பா. ஆனால் படத்தின் சில காட்சிகள் ஷூட்டிங் மீதம் இருக்கும் நிலையில் ரம்பா “நான் சிரஞ்சீவி படம் நடிக்க போகிறேன்” என்று படப்பிடிப்பின் பாதியிலேயே சென்று விட்டாராம்.

அதனால் இயக்குனர் செல்வபாரதி, டென்ஷன் ஆகிவிட்டாராம். ‘வண்ண நிலவே’ பாடலில் வருவது ரம்பா இல்லையாம், டூப் வைத்து தான் எடுத்தாராம். ரம்பா முகத்தை காட்டாமல் பாடல் முழுவதும் வருவது இதனால்தானாம். ஹிட் ஆன அந்த பாடல் இப்போதும் அதிகம் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது

அடுத்த செய்தி

டிரெண்டிங்