ஆப்நகரம்

அன்புச் செழியனால் சித்ரவதைக்கு ஆளான பிரபல முன்னணி நடிகைகள்!

பிரபல நடிகைகள் ரம்பா மற்றும் தேவயானி ஆகியோர் பைனான்சியர் அன்புச் செழியனின் கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

TNN 24 Nov 2017, 12:29 pm
பிரபல நடிகைகள் ரம்பா மற்றும் தேவயானி ஆகியோர் பைனான்சியர் அன்புச் செழியனின் கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil famous actresses who are tortured by anbu chezhian
அன்புச் செழியனால் சித்ரவதைக்கு ஆளான பிரபல முன்னணி நடிகைகள்!


பிரபல தயாரிப்பாளர் அசோக் குமாரின் தற்கொலை சம்பவம் தமிழ் சினிமா துறையினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல தயாரிப்பாளர்கள் பைனான்சியர்களால் தாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று தற்போது கூறி வருகின்றனர். சசிகுமாரின் கம்பெனி தயாரிப்பு நிர்வாகத்தை நிர்வகித்து வந்த அசோக் குமார் தற்கொலை சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசோக் குமார் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட தற்கொலைக் கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கு மதுரையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் அன்புச்செழியன்தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அந்த பைனான்சியரால் தொந்தரவால் ஏற்கனவே பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் சகோதரர் ஜி.வெங்கடேஷ் தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து பலரும் அவரால் பாதிக்கப்பட்டுள்ளது தற்போது தெரியவருகிறது.

இந்த நிலையில் 1990களில் மிக பிரபல நடிகைகளான ரம்பா, தேவயானி ஆகியோர் பைனான்சியர் அன்புச் செழியன் மூலம் சொந்தமாக படம் எடுத்து பின்னர் அவரின் சித்ரவதைக்கு ஆளானதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்