இயக்குனர் மிஷ்கின் மாமனிதன் படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் ‘மாமனிதன்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். முதல்முறையாக இப்படத்திற்காக இசைஞானி இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இப்படத்திற்காக இசையமைத்துள்ளனர். மனிதனின் யதார்த்தமான வாழ்க்கையை மாமனிதன் திரைப்படம் பிரதிப்பலித்துள்ளதால் படத்திற்கு விமர்சனரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தைப் பொதுமக்கள் முதல் திரைத்துறை பிரபலங்கள் வரை பலரும் படத்தைப் பாராட்டி வருகின்றனர்.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
சமீபத்தில் இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தொலைப்பேசி வாயிலாக இயக்குனர் சீனுராமிக்கு வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து இயக்குனர் ஷங்கர் மற்றும் பாரதிராஜா ஆகியோரும் பாராட்டியுள்ளனர்.தற்போது இயக்குனர் மிஷ்கின் மாமனிதன் படத்தை வெகுவாகப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
எல்லா சாமானியர்களின் வாழ்க்கையிலும் விதி என்னும் சூறாவளி அவ்வப்போது வாழ்க்கையை உடைத்துப் போடுகிறது. மாமனிதன் என்ற கதையில் ராதாகிருஷ்ணன் என்ற சாமானியனின் வாழ்க்கை ஒரு கயவனால் உடைக்கப்படுகிறது. ராதாகிருஷ்ணன் ஓடுகிறான். வழியில் அவன் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள் அவனை மீண்டும் ஒரு முழு மனிதனாக்குகிறது.
மிக எளிமையாக எடுக்கப்பட்ட ஒரு அன்பு சித்திரம். இந்தப்படம் என் சிந்தனைகளை மேம்படுத்துகிறது. என் வாழ்க்கையை அர்த்தப்பட வைக்கிறது.மசாலா படங்களுக்கும் பம்மாத்துப் படங்களுக்கும் நடுவே ஒரு மேன்மையான படத்தை தந்த சீனு ராமசாமிக்கு என் மனதின் ஆழத்தில் இருந்து நன்றிகள்." என்று தெரிவித்துள்ளார்.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
சமீபத்தில் இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தொலைப்பேசி வாயிலாக இயக்குனர் சீனுராமிக்கு வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து இயக்குனர் ஷங்கர் மற்றும் பாரதிராஜா ஆகியோரும் பாராட்டியுள்ளனர்.தற்போது இயக்குனர் மிஷ்கின் மாமனிதன் படத்தை வெகுவாகப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
எல்லா சாமானியர்களின் வாழ்க்கையிலும் விதி என்னும் சூறாவளி அவ்வப்போது வாழ்க்கையை உடைத்துப் போடுகிறது. மாமனிதன் என்ற கதையில் ராதாகிருஷ்ணன் என்ற சாமானியனின் வாழ்க்கை ஒரு கயவனால் உடைக்கப்படுகிறது. ராதாகிருஷ்ணன் ஓடுகிறான். வழியில் அவன் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள் அவனை மீண்டும் ஒரு முழு மனிதனாக்குகிறது.
மிக எளிமையாக எடுக்கப்பட்ட ஒரு அன்பு சித்திரம். இந்தப்படம் என் சிந்தனைகளை மேம்படுத்துகிறது. என் வாழ்க்கையை அர்த்தப்பட வைக்கிறது.மசாலா படங்களுக்கும் பம்மாத்துப் படங்களுக்கும் நடுவே ஒரு மேன்மையான படத்தை தந்த சீனு ராமசாமிக்கு என் மனதின் ஆழத்தில் இருந்து நன்றிகள்." என்று தெரிவித்துள்ளார்.