ஆப்நகரம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரசிகரிடம் போனில் பேசிய சிம்பு! என்ன கூறினார்?

தனது ரசிகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது என அறிந்து அவருக்கு போன் செய்து பேசியுள்ளார் சிம்பு.

Samayam Tamil 8 May 2020, 1:58 pm
நடிகர் சிம்பு நடித்து வந்த மாநாடு படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. அதனால் தற்போது சிம்பு வீட்டிலேயே தான் இருக்கிறார். அவர் வீட்டில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வைரலாகி இருந்தது.
Samayam Tamil Simbu


கொரோனா லாக்டவுன் முடிந்து நிலைமை சீரான பிறகு தான் சிம்புவின் மாநாடு பட ஷூட்டிங் மீண்டும் துவங்கும் என தெரிகிறது.

தற்போது தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்ற பலருக்கு கொரோனா தொற்று தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடலூரை சேர்ந்த சிம்பு ரசிகர் ஆனந்தன் என்பவருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னை கோயம்பேட்டில் கடை ஒன்றை நடத்தி வந்தார் என கூறப்படுகிறது.

அது பற்றி அறிந்த நடிகர் சிம்பு உடனே அவருக்கு போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். விரைவில் குணமடைவீர்கள், கவலை படவேண்டாம் என கூறி அவருக்கு ஊக்கம் கொடுத்தாராம் சிம்பு. மேலும் நம்பிக்கையுடன் இருந்தால் விரைவில் குணமடையலாம் என கூற அவருக்கு ஒரு குட்டி கதையையும் சிம்பு கூறினாராம்.

இந்த செய்தி சிம்பு ரசிகர்களை நெகிழ்ச்சியாக்கியுள்ளது. ட்விட்டரில் சிம்பு ரசிகர்கள் பலரும் இது பற்றி உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர். அவர் விரைவில் குணமாகவும் பிராத்திப்பதாக தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்