ஆப்நகரம்

Ponniyin Selvan: வந்தியத்தேவனாக லைக்ஸ் அள்ளும் கார்த்தி: மாஸ் பண்ணிட்டாரு..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படம் இன்று பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 30 Sep 2022, 10:42 am
தென்னிந்திய சினிமாவே எதிர்பார்த்து கொண்டிருந்த 'பொன்னியின் செல்வன்' படம் இன்று பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற நாவலான 'பொன்னியின் செல்வன்' கதை அதே பெயரில் மணிரத்னம் இயக்கத்தில் படமாக உருவானது.
Samayam Tamil கார்த்தி
கார்த்தி


விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள 'பொன்னியன் செல்வன்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம். மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலையிலே வெளியாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும் நடித்துள்ளனர். இதில் வந்திய தேவனாக கார்த்தி அட்டகாசமான நடிப்பை கொடுத்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அவரின் நடிப்பு வேறலேவலில் இருப்பதாகவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Sivakarthikeyan: சிவகார்த்திகேயனின் அடுத்த தரமான சம்பவம்: ரசிகர்கள் குஷி.!

ஜெயம் ரவிக்கு முதல் பாகத்தில் காட்சிகள் குறைவு என்பதால் இரண்தாம் பாகத்தில் அவரது நடிப்பை வெளிப்படுத்தும் காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் ஆதித்ய கரிகாலனாக கம்பீரமான நடிப்பை விக்ரம் வழங்கியுள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றன. மேலும் ஏ.ஆர். ரஹ்மானின் இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்