ஆப்நகரம்

விஜய்யின் மாமா, சொன்னது மாதிரியே செஞ்சுட்டார்யா

விஜய்யின் மாமா சேவியர் ப்ரிட்டோ தன் மருமகன் ஆகாஷ் முரளியை ஹீரோவாக்கிவிட்டார். அந்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Apr 2021, 5:25 pm
சேவியர் பிரிட்டோவின் மருமகன் ஆகாஷ் முரளி கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகவிருப்பதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.
Samayam Tamil fans appreciate xavier britto for akash murali
விஜய்யின் மாமா, சொன்னது மாதிரியே செஞ்சுட்டார்யா


ஆகாஷ்

மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ், விஜய்யின் மாமா சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாவை காதலித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார். வெவ்வேறு மதம் என்பதால் முதலில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஆகாஷும், சினேகாவும் காதலில் உறுதியாக இருந்ததை பார்த்த இருவீட்டாரும் மனம் மாறி திருமணம் செய்து வைத்துவிட்டனர். திருமணத்திற்கு முன்பு ஆகாஷை அவர் அண்ணன் அதர்வா கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகம் செய்து வைக்க முயற்சி செய்ததாக கூறப்பட்டது.

ஹீரோ

ஆகாஷை ஹீரோவாக்கும் பொறுப்பை சேவியர் பிரிட்டோ ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஆகாஷை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்கப் போகிறார் சேவியர் பிரிட்டோ என்று பேச்சாக இருந்தது. இந்நிலையில் தமிழ் புத்தாண்டு அன்று அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். ஆகாஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தை விஷ்ணுவர்தன் இயக்கவிருக்கிறார். அவர் அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கியவர்.

மாமனார்

சேவியர் பிரிட்டோ வெளியிட்ட அறிவிப்பை பார்த்தவர்கள், யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு மாமனார் என தெரிவித்துள்ளனர். மருமகனை ஹீரோவாக்கப் போகிறேன் என்று சொன்னது மாதிரியே செய்துவிட்டார் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள். தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும். ஆகாஷுக்கு யார் ஜோடியாக நடிக்கப் போகிறார் என்கிற விபரம் இன்னும் வெளியாகவில்லை. பிற கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர்

முன்னதாக சேவியர் பிரிட்டோ தன் மருமகன் விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக கடந்த ஜனவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை பார்த்த அனைவரையும் வில்லன் விஜய் சேதுபதி தான் கவர்ந்துவிட்டார். மாஸ்டர் படத்தின் ஹீரோ விஜய் தான் என்றாலும், படம் விஜய் சேதுபதியுடையது என்று ரசிகர்கள் தெரிவித்தனர். மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் ரேஞ்சே மாறிவிட்டது. அவரை வில்லனாக நடிக்க வைக்க பலரும் போட்டி போடுகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்