ஆப்நகரம்

தேதி குறிச்சு இப்படியாகிடுச்சே: சமந்தாவை பார்த்து ரசிகர்கள் கவலை

தேதி எல்லாம் குறித்து வைத்து இப்படியாகிவிட்டதே சமந்தா என ரசிகர்கள் அவரை பார்த்து பாவப்படுகிறார்கள்.

Samayam Tamil 30 Nov 2021, 4:23 pm
குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து சமந்தா முன்பு கூறியது பற்றி தற்போது மீண்டும் பேசப்படுகிறது.
Samayam Tamil fans feel sorry for samantha over baby issue
தேதி குறிச்சு இப்படியாகிடுச்சே: சமந்தாவை பார்த்து ரசிகர்கள் கவலை


சமந்தா

சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் முடிந்ததில் இருந்தே எப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்வீர்கள் என்று ரசிகர்கள் சமந்தாவிடம் கேட்டு வந்தனர். எப்பொழுது தாயாக வேண்டும் என்பது என் சொந்த விஷயம் என்றார் சமந்தா.

குழந்தை

பேட்டி ஒன்றில் சமந்தா கூறியதாவது, எனக்கு குழந்தை பிறந்தால் அது தான் எனக்கு உலகமாக இருக்கும். எந்த கஷ்டமும் தெரியாமல் வளர்ப்பேன். நான் சிறு வயதில் கஷ்டப்பட்டேன். எப்பொழுது குழந்தை பெற வேண்டும் என்று தேதி குறித்து வைத்திருக்கிறேன். அந்த தேதியில் தான் நடக்கப் போகிறது என்பது போன்று குறித்து வைத்திருக்கிறோம் என்றார்.

நாக சைதன்யா

நாங்கள் குறித்து வைத்த தேதியில் தான் குழந்தை பிறக்கும் என்று நாக சைதன்யா நம்புகிறார். எனக்கு குழந்தை பிறந்த பிறகு சில ஆண்டுகள் அதனுடன் தான் இருப்பேன். என் குழந்தை தான் எல்லாமுமாக இருக்கும். வேலைக்கு செல்லும் தாய்மார்கள் மீது அதிக மதிப்பு வைத்திருக்கிறேன் என்றார் சமந்தா. ஆனால் அவரும், நாக சைதன்யாவும் பிரிந்துவிட்டார்கள்.

ரசிகர்கள்

குழந்தை பெற தேதி எல்லாம் குறித்து வைத்த நிலையில் சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிந்துவிட்டார்களே என ரசிகர்கள் பாவப்படுகிறார்கள். மீண்டும் ஒரு முறை சமந்தா, நாக சைதன்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்யுமாறு நாகர்ஜுனாவிடம் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்