ஆப்நகரம்

அவரா இவர்? ஆள் அடைஅடையாளம் தெரியாலயே!

தனுஷுடன் ‘புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’ படத்தில் நடித்த நடிகை அபர்ணா பிள்ளை தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

Samayam Tamil 3 Apr 2019, 1:41 pm
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படங்களில் ஒன்று ‘புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’. சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவன் குடும்ப பிழைப்புக்காக சிங்கப்பூர் செல்வதும், பின்னர் அங்கிருந்து இந்தியா திரும்புவதும் பெற்றிய சுவாரசியமான கதைதான் இந்த படம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை அபர்ணா பிள்ளை அறிமுகமானார்.
Samayam Tamil aparn-pillai


இந்த படத்தில் நடித்ததன் மூலம் அபர்ணா பிள்ளை அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தது, இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த திரைப்படங்கள் ‘ஏபிசிடி’, ‘நெஞ்சில் ஜில் ஜில்’, ‘கண்ணுக்குள்ளே’ ஆகிய படங்களில் நடித்தார். மலையாளத்தில் ‘டிசம்பர்’ என்ற படத்திலும் நடித்திருந்தார். அதன் பின்னர் வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

கடந்த 2011 ஆம் ஆண்டு பரணி என்ற டாக்டரை திருமணம் செய்து கொண்டு கணவர் குடும்பத்துடன் செட்டிலானார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. தற்போது ஒரு நடன பள்ளியை வைத்து நடத்தி வருகிறார் அபர்ணா.

இந்நிலையில் இவரது சமீபத்திய புகைப்படம் ஓன்று வெளியாகியது. இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரா இது என ஆச்சரியத்துடன் கேட்கின்றனர்..

அடுத்த செய்தி

டிரெண்டிங்