பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த் பெயரை சொன்னாலே அவர் பூசினாற் போன்று இருப்பது தான் ரசிகர்களின் நினைவுக்கு வரும். அது தான் அவர்களுக்கு பிடித்திருந்தது. இந்நிலையில் யாஷிகா தன் உடல் எடையை வெகுவாக குறைத்துவிட்டார். முத்தின கத்திரிக்கா படம் புகழ் வெங்கட் ராகவன் இயக்கும் கடமையை செய் படத்தில் நடிக்கிறார் யாஷிகா. அந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். சுந்தர் சி., பூனம் பஜ்வா நடித்த முத்தின கத்திரிக்கா படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்த கடமையை செய் என்று நம்பப்படுகிறது.
கடமையை செய் படத்தின் ஷூட்டிங் நேற்று பூஜையுடன் சென்னையில் துவங்கியது. பூஜையின்போது எஸ்.ஜே. சூர்யா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களுக்கு இரண்டு அதிர்ச்சி.
ஒன்று, யாஷிகா அநியாயத்துக்கு ஒல்லியாகிவிட்டார் என்பது. இரண்டு, நெற்றி வகிடில் குங்குமம் வைத்திருந்ததால் அவருக்கு திருமணமாகிவிட்டதோ என்று.
என்ன யாஷிகா, திடீர் என்று திருமணம் செய்து கொண்டுள்ளீர்களா?. சொல்லவே இல்லை. நீங்கள் திருமதியா , செல்வியா என்பதை தயவு செய்து கூறவும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிலரோ, கடமையை செய் படத்தில் யாஷிகா சூர்யாவின் மனைவியாக நடிப்பார் போன்று. அதனால் படப்பிடிப்புக்காக சேலை அணிந்து, நெற்றி வகிடில் குங்குமம் வைத்திருக்கிறார் என்று கூறியுள்ளனர். முன்னதாக சனம் ஷெட்டியின் நெற்றி வகிடில் குங்குமத்தை பார்த்தும் அவருக்கு திருமணமாகிவிட்டதோ என்று பேச்சு கிளம்பியது.
அது குறித்து அறிந்த சனமோ, தனக்கு திருமணமாகவில்லை என்றும், தன் குடும்பத்தில் திருமணமான பெண்கள் மட்டும் தான் நெற்றி வகிடில் குங்குமம் வைக்க வேண்டும் என இல்லை என்றும் சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடமையை செய் படத்தின் ஷூட்டிங் நேற்று பூஜையுடன் சென்னையில் துவங்கியது. பூஜையின்போது எஸ்.ஜே. சூர்யா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களுக்கு இரண்டு அதிர்ச்சி.
ஒன்று, யாஷிகா அநியாயத்துக்கு ஒல்லியாகிவிட்டார் என்பது. இரண்டு, நெற்றி வகிடில் குங்குமம் வைத்திருந்ததால் அவருக்கு திருமணமாகிவிட்டதோ என்று.
என்ன யாஷிகா, திடீர் என்று திருமணம் செய்து கொண்டுள்ளீர்களா?. சொல்லவே இல்லை. நீங்கள் திருமதியா , செல்வியா என்பதை தயவு செய்து கூறவும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிலரோ, கடமையை செய் படத்தில் யாஷிகா சூர்யாவின் மனைவியாக நடிப்பார் போன்று. அதனால் படப்பிடிப்புக்காக சேலை அணிந்து, நெற்றி வகிடில் குங்குமம் வைத்திருக்கிறார் என்று கூறியுள்ளனர். முன்னதாக சனம் ஷெட்டியின் நெற்றி வகிடில் குங்குமத்தை பார்த்தும் அவருக்கு திருமணமாகிவிட்டதோ என்று பேச்சு கிளம்பியது.
அது குறித்து அறிந்த சனமோ, தனக்கு திருமணமாகவில்லை என்றும், தன் குடும்பத்தில் திருமணமான பெண்கள் மட்டும் தான் நெற்றி வகிடில் குங்குமம் வைக்க வேண்டும் என இல்லை என்றும் சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.