ஆப்நகரம்

கடைசியில சித்ரா கேஸும் சுஷாந்த் கேஸ் மாதிரி ஆகிடுமோ

சித்ராவின் வழக்கு விசாரணையும் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் வழக்கு போன்று ஆகிவிடுமோ என்று ரசிகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 31 Dec 2020, 2:34 pm
சித்ராவின் தற்கொலை வழக்கு விசாரணை நடந்து வரும் விதத்தை பார்த்து ரசிகர்கள் இதற்கு ஒரு முடிவே இல்லையா என்று கேட்கிறார்கள்.
Samayam Tamil fans worry about vj chitras case
கடைசியில சித்ரா கேஸும் சுஷாந்த் கேஸ் மாதிரி ஆகிடுமோ


சித்ரா

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சி தொடரில் முல்லையாக நடித்து அனைவரையும் கவர்ந்து வந்த விஜே சித்ரா கடந்த 9ம் தேதி ஹோட்டல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்று சித்ராவின் பெற்றோர், ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரின் கணவர் ஹேமந்தை போலீசார் கைது செய்தனர். என் மகள் தப்பானவனிடம் சிக்கிக் கொண்டாள் என்று சித்ராவின் தந்தை தெரிவித்தார். சித்ரா விவகாரம் தொடர்பாக ஆர்டிஓ திவ்யஸ்ரீ விசாரணை நடத்தி முடித்துள்ளார். இந்நிலையில் சித்ரா வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று அவரின் அம்மா முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார்.

கணவர்

சித்ராவை அவரின் கணவர் ஹேமந்த் கொடுமைப்படுத்தி வந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். சித்ரா டிவி தொடரில் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து வந்தது ஹேமந்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். மேலும் சித்ராவை நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு வீட்டிலேயே இருக்குமாறு கூறி வந்துள்ளார் ஹேமந்த். காதல் காட்சிகளில் நடிப்பது தொடர்பாக சித்ராவுக்கும், ஹேமந்துக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. சித்ரா பெரிய திரையில் ஹீரோயினாக ஆசைப்பட்டார். அவர் நடித்த கால்ஸ் படம் அடுத்த மாதம் ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தில் அவர் அணிந்த நைட்டியை இயக்குநரிடம் கேட்டு வாங்கிச் சென்றிருக்கிறார். கால்ஸ் பட நைட்டியை அணிந்து தான் சித்ரா தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதை பார்த்த கால்ஸ் பட இயக்குநர் மற்றும் படக்குழு அதிர்ச்சி அடைந்தது.

குழப்பங்கள்

சித்ராவின் மரணத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளது. நள்ளிரவு வரை ஷூட்டிங்கில் இருந்த அவர் அறைக்கு சென்றதும் குளிக்க வேண்டும் என்று கூறி கணவரை எதற்காக வெளியே செல்லச் சொன்னார். ஷூட்டிங்கில் இருந்து சந்தோஷமாக சென்ற சித்ரா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் உள்ளிட்ட கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை. சித்ராவின் உடலில் காயங்கள் எப்படி ஏற்பட்டது, அவர் வெகு நேரமாக தூக்கில் தொங்கியதாக சொல்லப்படும் நிலையில் கழுத்தில் தழும்பு இல்லையே ஏன் என்று ரசிகர்கள் கேட்கிறார்கள்.

சுஷாந்த் கேஸ்

சித்ரா இறந்து ஒரு மாதம் ஆகப் போகிறது. ஆனால் அவர் தற்கொலை தொடர்பான எந்த குழப்பமும் தீரவில்லை. இதை எல்லாம் பார்த்தால் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை வழக்கு செல்லும் விதம் தான் நினைவுக்கு வருகிறது. சுஷாந்த் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. இப்படியே போனால் சித்ராவின் வழக்கும் அப்படியே ஆகிவிடும் போன்று. பிரபலங்களாக இருந்து இறப்பவர்களுக்கே இந்த கதி என்றால் சாதாரண ஆட்களின் நிலையை சொல்லவா வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்