ஆப்நகரம்

நீச்சல் உடையில் அமலா பால்: கவலையில் ரசிகர்கள், என்ன கவலை தெரியுமோ?

அமலா பாலின் நீச்சல் உடை புகைப்படங்களை பார்த்த ரசிகர்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 10 Sep 2019, 11:40 am
ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படத்தில் துணிந்து ஆடையில்லாமல் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் அமலா பால். இந்நிலையில் அவர் ஊதா கலரு நீச்சல் உடை அணிந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil fans worry and fear after seeing amala pauls swimsuit pictures
நீச்சல் உடையில் அமலா பால்: கவலையில் ரசிகர்கள், என்ன கவலை தெரியுமோ?


அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

ஏம்மா அமலா பால், இப்படி பாறை மீது நிற்கிறீர்களே கீழே விழுந்துவிட்டால் என்ன செய்வது. அடுத்த ஆடை படத்திற்காக நான் காத்திருக்கிறேன், கீழே விழுந்து கை, காலை உடைத்து என்னை ஏமாற்றிவிடாதீர்கள்.

புகைப்படத்தில் நீங்கள் சரியாக தெரியவில்லை, ஜூம் செய்தும் பலனில்லை. வெளியிடுவது தான் வெளியிடுகிறீர்கள் க்ளோசப் புகைப்படத்தை வெளியிடக் கூடாதா?

இந்த காட்சி எந்த படத்தில் வரப் போகிறது?. நீங்கள் தைரியமானவர் என்பதை ஒப்புக் கொள்கிறோம், அதற்காக ஏன் இப்படி செய்கிறீர்கள். இதற்கு பெயர் குரங்கு வேலை. உங்கள் உடம்பில் லேசான கீறல் விழுந்தாலும் எங்களால் தாங்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

அமலா செய்த காரியம் பிடிக்காதவர்களோ,

ஒரு படத்தில் வித்தியாசமாக நடித்துவிட்டு இந்த அமலா செய்யும் பந்தா இருக்கே, அப்பா முடியலடா சாமி. போய் வேறு பட வேலை ஏதாவது இருந்தால் பார்க்கவும், சும்மா சீன் போட வேண்டாம் என்கிறார்கள்.

புகைப்படங்களில் அமலா பால் சரியாக தெரியவில்லை என்ற கவலை, மேலும் கீழே விழுந்துவிடுவாரோ என்ற பயம் தான் ரசிகர்களுக்கு.

அமலா பால் தற்போது ஆடுஜீவிதம் என்கிற மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் கேடவர் என்கிற படத்தை தயாரித்து, நடித்துக் கொண்டிருக்கிறார். அதோ அந்த பறவை போல படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்