ஆப்நகரம்

பெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: 30 படங்கள் பாதிப்பு!!

பெப்சி தொழிலாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் 30 படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 1 Sep 2017, 2:21 pm
பெப்சி தொழிலாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் 30 படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil fefsi again entered into strike
பெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: 30 படங்கள் பாதிப்பு!!


தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) இன்று முதல் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியதாவது :

கடந்த 50 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) பெரும் பங்கு வகித்து வருகிறது. தொழிலாளர்களுக்கான சலுகைகளை பெறுவதில் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பல சூழலில் இழுபறி நிலவியது. அப்போதெல்லாம் நாங்கள் எங்களது உரிமைகளை விட்டுக் கொடுத்து தமிழ் சினிமாவின் பயணத்துக்கு உதவியிருக்கிறோம். தமிழ் சினிமாவின் தற்போதைய நிலையை உணர்ந்து தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைக்கூட விட்டுக் கொடுத்துள்ளோம். மற்றொரு தொழிலாளர் அமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் தயாரிப்பாளர் சங்கம் செயல்படுகிறது.

இதுவரை நடந்த போராட்டம் எங்களது உரிமைக்கான போராட்டமாக இருந்தது. இனிமேல் அடிப்படை வாழ்க்கைக்காக போராட வேண்டியுள்ளது. இதனால் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவிக்கிறோம். எங்களுடைய இந்த முடிவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்புதான் காரணம். இதைக் கண்டிக்கும் விதமாக வரும் 5-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். எங்களது கோரிக்கைகளை ஏற்கும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபடவுள்ளனர என்றார்.

fefsi again entered into strike!!

அடுத்த செய்தி

டிரெண்டிங்