ஆப்நகரம்

தேசிய விருது பெற்ற நடிகையை அலட்சியப்படுத்திய விழா ஒருங்கிணைப்பாளர்!

தேசிய விருது பெற்ற நடிகை சுரபிலட்சுமியை விழா ஒருங்கிணைப்பாளர் கமல் அலட்சியப்படுத்தியுள்ளார்.

TNN 13 Dec 2017, 5:03 pm
தேசிய விருது பெற்ற நடிகை சுரபிலட்சுமியை விழா ஒருங்கிணைப்பாளர் கமல் அலட்சியப்படுத்தியுள்ளார்.
Samayam Tamil festival coordinator who ignored national award winning actress
தேசிய விருது பெற்ற நடிகையை அலட்சியப்படுத்திய விழா ஒருங்கிணைப்பாளர்!


‘மின்னாமினுங்கு’ என்ற மலையாள படத்திற்காக தேசிய விருது வாங்கியவர் நடிகை சுரபி லட்சுமி. சமீபத்தில் நடைபெற்ற கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்கு அவர் தானே முன்வந்து கேட்டும் கூட, அவரை மதித்து பாஸ் கொடுக்கப்படாமல் புறக்கணித்தனர். இந்த சம்பவம் குறித்து பெரிய சர்ச்சை வெடித்துள்ளது.

மேலும் அந்த விழாவின் ஒருங்கிணைப்பாளரான மலையாள இயக்குனர் கமலுக்கு கண்டனங்களும் எழுந்துள்ளன .“தேசிய விருதுபெற்ற நடிகை என்பதற்காக அவருக்கு தனியாகவெல்லாம் அழைப்பு அனுப்பவில்லை. சொல்லப்போனால் அவர் நடித்த ‘மின்னாமினுங்கு’ படம் கூட இந்த விழாவில் திரையிடப்படவில்லை. தேசியவிருது பெற்றவர்களை அழைத்து கௌரவிக்கும் மேடை அல்ல இந்த திரைப்பட விழா” என இதுபற்றி கமல் தரப்பில் ரொம்பவே அலட்சியமாக பதில் சொல்கிறார்களாம்...

அடுத்த செய்தி

டிரெண்டிங்