ஆப்நகரம்

கவர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்துறாங்க’ கேத்ரின் தெரசா வேதனை!

நடிகைகளை கவர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்துகிறாங்க என்று நடிகை கேத்ரின் தெரிசா தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

TOI Contributor 23 Mar 2016, 6:03 pm
நடிகைகளை கவர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்துகிறாங்க என்று நடிகை கேத்ரின் தெரிசா தனது வேதனையை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil film industry is using actress as glamourouscatherine tresa
கவர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்துறாங்க’ கேத்ரின் தெரசா வேதனை!

நடிகை கேத்ரின் ‘மெட்ராஸ்’ படம் மூலம் தமிழ் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் கேத்ரின் தெரசா குடிசைப்பகுதி பெண்ணாக நடித்துள்ளார். அடுத்தப் படத்தில் நவநாகரீக உடைகளில் ‘கதகளி’, ‘கணிதன்’ ஆகிய படங்களில் நடித்தார். போட்டி நடிகைகள் பலர் இருந்தபோதும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வரும் அவர் தற்போது சோகத்தில் இருக்கிறார்.
தற்போது அந்த சோகத்திற்கான பதிலை கேத்ரின் தெரசா கூறுகையில், ‘‘என்னை அழகாக காட்டவே இயக்குனர்கள் நினைக்கிறார்கள். மாடர்ன் டிரஸ், இறுக்கமான உடைகள் என காஸ்டியூமில் என்னை கவர்ச்சியாக காட்ட வைக்கின்றனர். இதனால் எனக்கு ரசிகர்கள் அதிகரித்திருக்கிறார்கள். ஆனால் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க இன்னும் வாய்ப்பு வரவில்லை. இதுதான் எனக்கு வருத்தம். ‘கதகளி’ படம் தமிழில் வெளியானபிறகு தெலுங்கிலும் பெரிய அளவில் வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்றது. எந்த மொழியில் நடிக்கிறோம் என்பது முக்கியமல்ல எப்படிப்பட்ட வேடங்களில் நடிக்கிறோம் என்பதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதுபோன்ற வாய்ப்புகளுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார் கேத்ரின் தெரசா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்