ஆப்நகரம்

இறுதி வாய்ப்பு பெண்களுக்கே கிடைத்துள்ளது: நடிகர் கமல்ஹாசன்!

பிக்பாஸ் சீசன் 2வில் வெற்றி பெறப் போகும் போட்டியாளர்களின் இறுதி வாய்ப்பு பெண்களுக்கே கிடைத்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Samayam Tamil 24 Sep 2018, 4:23 pm
பிக்பாஸ் சீசன் 2வில் வெற்றி பெறப் போகும் போட்டியாளர்களின் இறுதி வாய்ப்பு பெண்களுக்கே கிடைத்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Samayam Tamil bigg boss2


பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 இறுதி நாளான 100 வது நாளை எட்டிவிட்டது. கடந்த வருடத்தை தொடர்ந்து கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த வாரம் யாஷிகா, பாலாஜி இருவரும் நாமினேட் ஆனார்கள். ஐஸ்வர்யா மட்டும் மீண்டும் மீண்டும் காப்பாற்றப்பட்டு வருகிறது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார் என்ற ரகசியம் தற்போது வரை தெரியவில்லை. தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகிறார் ஐஸ்வர்யா.

இந்நிலையில் தற்போது ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா, விஜய லட்சுமி ஆகியோர் இறுதி பட்டியலில் இருக்கிறார்கள். இவர்களே இறுதிப்போட்டியாளர்கள் என கமல்ஹாசனும் அறிவித்துவிட்டார். இதே வேளையில் கமல்ஹாசன் எந்த பிக்பாஸிலும் இல்லாதளவில் இங்கே தான் இறுதியில் பெண்களே இறுதிப்போட்டியாளர்களாக இருக்கிறார்கள் என குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்