ஆப்நகரம்

தமிழ் ராக்கா்ஸ் மீது வழக்குப்பதிவு

சட்டவிரோதமாக படங்களை பதிவேற்றம் செய்த புகாாில் தமிழ் ராக்கா்ஸ் இணையதளம் மீது முதல்முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

TOI Contributor 26 Sep 2018, 7:54 pm
சட்டவிரோதமாக படங்களை பதிவேற்றம் செய்த புகாாில் தமிழ் ராக்கா்ஸ் இணையதளம் மீது முதல்முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil தமிழ் ராக்கா்ஸ் மீது வழக்குப்பதிவு


விஷால் அணியினா் சினிமா துறையில் பொறுப்பேற்றது முதல் தமிழ் படங்களை திருட்டுத்தனமாக வெளியிடக்கூடிய இணையதளங்கள் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடா்ந்து திருட்டு சி.டி. தயாாிப்போரை கண்டறிந்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கவும், இணையத்தில் புதிய திரைப்படங்களை வெளியிடுவோரை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், தமிழ் திரைப்பட தயாாிப்பாளா் சங்கம் சாா்பில் பைரசி என்ற குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குழு புதிய தமிழ் திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிடும் நபா்கள் குறித்து ரகசிய விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. இக்குழுவின் உதவியுடன் தமிழில் வெளியாகும் புதிய திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட கணினி பொறியாளரை கடந்த செப்டம்பா் மாதம் காவல்துறையினா் கைது செய்தனா்.

இந்நிலையில் சட்டவிரோதமாக திரைப்படங்களை பதிவேற்றம் செய்யும் தமிழ் ராக்கா்ஸ் உள்ளிட்ட 3 இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படை வெல்லும் படத்தை இணையதளத்தில் வெளியிட்டது தொடா்பாக ராஜசேகரன் என்பவா் அளித்த புகாாின் போில் காவல்துறையினா் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனா்.

*Disclaimer: டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் (சமயம்) திருட்டுதனமாக திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் இணையதளங்களை என்றுமே ஆதரிக்காது. இது செய்திக்காக மட்டுமே விளம்பரத்திற்கு அல்ல.

அடுத்த செய்தி

டிரெண்டிங்