பொங்கல் தினத்தையொட்டி ஸ்கெட்ச், தானா சேர்ந்த கூட்டம் மற்றும் குலேபகாவலி ஆகிய மூன்று படங்கள் திரைக்கு வந்துள்ளன. இந்தப் படங்களைக் காண திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த ஆண்டின் முதல் தமிழ் திரைப்படங்களான ஸ்கெடச், தானா சேர்ந்த கூட்டம் மற்றும் குலேபகாவலி ஆகிய மூன்று படங்கள் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வந்துள்ளன. விடுமுறைத் தினங்கள் என்பதால் இன்றிலிருந்தே திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகின்றது.
சூர்யா நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி உள்ள தானா சேர்ந்தக் கூட்டம் படத்தில், ஏற்கனவே பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் படத்தின் மீது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.
அதேபோல், விக்ரம் நடிப்பில் ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள ஸ்கெடச் படமும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தவிர, பிரபுதேவா மற்றும் ஹன்சிகா நடித்துள்ள குலேபகாவலி படத்திற்கும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளதால் இம்மூன்று படங்களும் நல்ல வசூலைப் பெறும் என்று நம்பப்படுகிறது.
இருப்பினும், இந்த ஆண்டின் முதல் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாக மாறும் படம் எது என்று அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் தமிழ் திரைப்படங்களான ஸ்கெடச், தானா சேர்ந்த கூட்டம் மற்றும் குலேபகாவலி ஆகிய மூன்று படங்கள் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வந்துள்ளன. விடுமுறைத் தினங்கள் என்பதால் இன்றிலிருந்தே திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகின்றது.
சூர்யா நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி உள்ள தானா சேர்ந்தக் கூட்டம் படத்தில், ஏற்கனவே பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் படத்தின் மீது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.
அதேபோல், விக்ரம் நடிப்பில் ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள ஸ்கெடச் படமும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தவிர, பிரபுதேவா மற்றும் ஹன்சிகா நடித்துள்ள குலேபகாவலி படத்திற்கும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளதால் இம்மூன்று படங்களும் நல்ல வசூலைப் பெறும் என்று நம்பப்படுகிறது.
இருப்பினும், இந்த ஆண்டின் முதல் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாக மாறும் படம் எது என்று அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.