ஆப்நகரம்

முதன் முறையாக மகனை வெளியே காட்டிய சந்தானம்

முதன் முறையாக சந்தானம் தன்னுடைய மகனை பொது நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளார்.

TNN 7 Dec 2017, 2:07 pm
முதன் முறையாக சந்தானம் தன்னுடைய மகனை பொது நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளார்.
Samayam Tamil first time comedy actor santhanam introduce his son
முதன் முறையாக மகனை வெளியே காட்டிய சந்தானம்


தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் சந்தானம். பல படங்களில் காமெடி ரோல்களின் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். காமெடியைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, சக்க போடு போடு ராஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்படம் வரும் 22ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து சர்வர் சுந்தரமும் வெளியாகவுள்ளது. அடுத்து, ஓடி ஓடு உழைக்கணும், மன்னவன் வந்தானடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.



இந்த நிலையில், இதுவரை தன்னுடைய குடும்ப உறுப்பினர்களையும், அவர்கள் பற்றியும் எதுவும் தெரிவிக்காத சந்தானம், முதன் முறையாக அவருடைய மகனை பொது நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளார். சமீபத்தில் சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தன்னுடைய மகன் நிபுனை அழைத்து வந்துள்ளார். தற்போது அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்