ஆப்நகரம்

முதல்வன் முதல் சிங்கம் வரை.. தளபதி விஜய் தவறவிட்ட 5 பிளாக்பஸ்டர் படங்கள்

நடிகர் விஜய் நடிக்க மறுத்து பின்னர் வேறு ஹீரோக்கள் மூலமாக மிகப்பெரிய ஹிட் ஆன படங்களின் விவரம்.

Samayam Tamil 15 Jul 2020, 7:38 pm
நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் டாப் இடத்தில் இருப்பதற்கு அவர் சமீபத்திய வருடங்களில் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் தான் காரணம். அதனால் அவரது படங்களுக்கு சாதாரணமாகவே அதிக அளவில் எதிர்பார்ப்பு எழுகிறது. தற்போது விஜய் நடித்து முடித்து ரிலீஸுக்காக காத்திருக்கும் மாஸ்டர் படத்திற்கும் அதிகம் எதிர்பார்ப்பு உள்ளது அனைவருக்கும் தெரிந்தது தான்.
Samayam Tamil Vijay


விஜய் நடிப்பில் ஒரு படமாவது இயக்க வேண்டும் என பல இயக்குனர்கள் வரிசையில் காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அவரிடம் கதையை கூறி வாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் பலர் உள்ளனர். அப்படி விஜய்யிடம் இதற்கு முன்பு கதை கூறி, அவர் நடிக்க மறுத்து, அதற்கு பிறகு வேறு நடிகர்கள் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட் ஆன ஒரு சில படங்களை பற்றி தற்போது பார்ப்போம்.

முதல்வன்:

1999இல் வெளிவந்த இந்த படத்தில் அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்தார். மிகப் பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் முதலில் ரஜினிகாந்த்தை நடிக்க வைக்கத்தான் ஷங்கர் முயற்சி செய்தார். ஆனால் அவர் நிராகரித்ததால் அதற்க்கு பிறகு விஜய்யை அணுகினார் ஷங்கர். ஆனால் விஜய்யும் அதில் நடிக்க மறுத்து விட்டார். அந்த சமயத்தில் அவர் அரசியல் படங்களில் நடிக்க விரும்பவில்லை. அதற்கு பிறகு தான் அர்ஜுன் ஒப்பந்தம் ஆனார். அதற்கு பிறகு 2012இல் ஷங்கருடன் நண்பன் படத்திற்காக கூட்டணி சேர்ந்தார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.


ரன்:

2002ல் மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்தது இந்த படம். இதில் ரகுவரன், அதுல் குல்கர்னி, அனுஹாசன், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் ரஜினியின் பாபா படம் வெளியாகி சில வாரங்கள் கழித்து வெளியானது. பாக்ஸ் ஆபிஸில் மிகப் பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் நடிக்க லிங்குசாமி முதலில் விஜய்யை தான் அணுகினாராம். ஆனால் சில காரணங்களால் விஜய் முதலில் நடிக்க முடியாமல் போனதால் அதற்கு பிறகு மாதவன் தேர்வாகி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

ஆட்டோகிராப்:

சேரன் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளிவந்த இந்தப் படம் 2004இல் வெளிவந்திருந்தது. இந்த படம் தேசிய விருதும் வென்றது குறிப்பிடத்தக்கது. முதலில் இந்த படத்தில் நடிக்க விஜய் உள்ளிட்ட சில நடிகர்களை தான் சேரன் அணுகியுள்ளார், ஆனால் கடைசியில் அவரே ஹீரோவாக நடித்து விட்டார். இந்த படத்தை பார்த்துவிட்டு சேரனை விஜய் அதிகம் பாராட்டினாராம். அதற்குப்பிறகு எனக்காக ஒரு கதை தயார் செய்யுங்கள் என்ன அவரிடம் கூறி உள்ளார் விஜய். ஆனால் அந்த நேரத்தில் சேரன் தவமாய் தவமிருந்து என்ற படத்தை இயக்கி வந்ததால் விஜய்யுடன் கூட்டணி சேரும் வாய்ப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அது தான் செய்த மிகப்பெரிய தவறு என்று சில வாரங்களுக்கு முன்பு சேரன் வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சண்டக்கோழி:

விஷால் மற்றும் லிங்குசாமி கூட்டணியில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபீசில் மிகப் பெரிய ஹிட் ஆனது. அதை மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்தனர். இந்த படத்தில் முதலில் நடிக்க சூர்யாவை அணுகினார் லிங்குசாமி. அவர் ஏற்றுக் கொள்ளாததால் அதற்க்கு பிறகு விஜய்யிடம் கதை கூறினார். ஆனால் விஜய்யும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. படத்தின் இரண்டாம் பாதியில் அப்பா கதாபாத்திரமான ராஜ்கிரணின் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருந்தது, அதனால் தான் விஜய் நடிக்கவில்லை என கூறப்படுகிறது.

சிங்கம்:

போலீஸ் கதை களத்தில் ஹரி இயக்கியிருந்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அனைத்து சென்டர்களிலும் நல்ல வசூல் ஈட்டிய இந்த படம் மிக பெரும் ஹிட் ஆனது. அதற்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களை ஹரி இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த படத்தில் நடிக்க விஜய்யை தான் அணுகினாராம் ஹரி. ஆனால் அதில் அவர் நடிக்க மறுத்துவிட்டார். அதனால் இந்த வாய்ப்பு சூர்யாவுக்கு சென்றது. அதற்குப் பிறகும் விஜய் மற்றும் ஹரி எந்த படத்திலும் கூட்டணி சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்